பள்ளி முடிந்து வந்த குழந்தைகளுக்கு அரங்கேறிய சோகம்.. வேனிற்குள்ளேயே துடிதுடித்து உயிரிழந்த பரிதாபம்.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள சங்ரூர் மாவட்டத்தில் தனியார் பள்ளியானது செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளி நேற்று மாலை முடிவடைந்ததும், சுமார் 12 மாணவ - மாணவியர்கள் வேனில் வீடு திரும்பிக்கொண்டு இருந்தனர். 

இந்த நேரத்தில், சாலையில் சென்று கொண்டு இருந்த வேணானது திடீரென தீப்பற்றி எறிந்துள்ளது. வேனுக்கு உள்ளே இருந்த குழந்தைகள் அனைவரும் பயத்தில் "காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்" என்று அபயகுரலெழுப்பினர். 

வேனை விரைவாக நிறுத்திய ஓட்டுநர், வேனின் கதவை திறக்க முயற்சித்தும் திறக்க இயலவில்லை. இந்த நிலையில், குழந்தைகளின் அபயக்குரலை கேட்டு அதிர்ச்சியடைந்த விவசாயிகள் விரைந்து வந்து தீயை அணைக்க முயற்சித்தனர். 

இருப்பினும், இவர்களால் சுமார் 8 குழந்தைகளை காப்பாற்ற முயற்சித்த நிலையில், 4 குழந்தைகள் உடலில் தீப்பற்றி எரிந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடித்தது உயிரிழந்தனர். இவர்களின் வயது சுமார் 10 வயது முதல் 12 வயதிற்குள் தான் இருக்கும். 

இந்த விபத்து சம்பவத்தை அறிந்த அம்மாநில முதலமைச்சர் அமிர்ந்தர் சிங் நீதி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும், இந்த விபத்திற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும், கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.  

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Punjab ven fire accident school peoples died


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->