3 பாலியல் தொழில் பெண்களை 9 பேர் சேர்ந்து விடிய விடிய பலாத்காரம் செய்த கொடூரம்.! வெளியான பேரதிர்ச்சி தகவல்.!!  - Seithipunal
Seithipunal


இந்த உலகம் முழுவதும் பெண்களுக்கு எதிரான பல அநீதிகள் தொடர்ந்து வருகிறது. தங்களின் ஒரு வேலை உணவிற்க்காகவும்., தங்களது மகனின் படிப்பிற்க்காகவும்., மருத்துவ செலவிற்க்காகவும் ஏழ்மையில் வாடி வரும் பெண்கள் பாலியல் தொழிலுக்கு மாற்றப்படும் கொடூரமும்., உடலின் வேதனையை மறைத்து குழந்தைகளின் எதிர்காலத்தை எண்ணி., ஒரு வேலை உணவிற்க்காக தங்களின் உடலை விற்பனை செய்யும் பெண்களை பலாத்காரம் செய்தது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது 

பாலியல் தொழிலால் கடும் மன வேதனையிலும்., உடல் வேதனையிலும் பணியாற்றி வரும் பெண்களை கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி நகரில் இருக்கும் மெட்ரோ இரயில் நிலையத்தில்., வாகனத்தில் வந்த இரண்டு நபர்கள் இரண்டு வாகனங்களை முன்பதிவு செய்தனர். பின்னர் அந்த காரில் பாலியல் தொழிலாளர்களை ஏற்றி கொண்டு டெல்லியில் இருந்து மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள நொய்டாவிற்கு சென்றனர். 

இந்த சமயத்தில்., நொய்டாவிற்கு சென்ற பின்னர் அங்கு மொத்தமாக ஏழு பேர் இருந்துள்ளனர். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பெண்கள்., அந்த இருவர் வழங்கிய பணத்தை திரும்பி கொடுத்து., தங்களை மீண்டும் டெல்லிக்கு கொண்டு சென்று விடுமாறு கூறியுள்ளனர். இதனை ஏற்காத கொடூர கும்பலானது மூன்று பெண்களையும் கட்டாயப்படுத்தி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகியுள்ளனர். 9 பெரும் அதிகாலை வரை பெண்களை பலவந்தமாக கற்பழித்த நிலையில்., அதிகாலை ஐந்து மணியானதும் அங்குள்ள சாலையில் விட்டுவிட்டு சென்றுள்ளனர். 

இதனையடுத்து இது குறித்து பெண்கள் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கவே., தக்கவை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் இது குறித்து விசாரணை மேற்கொண்டு., வழக்குப்பதிவு செய்து இந்த கொடூரத்தில் ஈடுபட்ட காம கொடூரர்களை கைது செய்தனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட  லவ்லேஸ் யாதவ்., அகிலேஷ் யாதவ், போலா யாதவ், அர்ஜூன் யாதவ், ராஜேஸ் யாதவ், சதீஷ் பால், ராஜ்குமார் மயூரா மற்றும் முலாயம் சிங் ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in noida three prostitution girl gang rapped by 9 man police investigation going on


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->