கைலாசாவிற்கு வழிதேடி கைலாசம் சென்றடைந்த சோகம்... கண்ணீரில் குடும்பம்.!!
in nithyandha fan died in nepal border
கைலாச நாட்டில் அனைத்து விதமான பாலியல் நடவடிக்கைகளுக்கும் அனுமதி உண்டு என்று கூறியதை உண்மை என்று நம்பி பலரும் நான் நீ என்று முண்டியடித்துக் கொண்டு இருகின்றனர். அந்த வகையில் தான் கைலாச வாசி என்று கூறிக் கொண்ட ஒருவருக்கு நேர்ந்த விபரீதத்தை விளக்குகின்றது இந்த பதிவு.
குஜராத் மாநிலத்தில் இருக்கும் அகமதாபாத்தில் நித்யானந்தா ஆசிரம வாசியாக இருந்த சதீஷ் செல்வகுமார் என்கிற ஸ்ரீ ஈஸ்வர் ப்ரியானந்தா பிராண பிரியாவின் முக்கிய ஆதரவாளர்களாக இருந்தவர்.
குஜராத்தில் இருக்கும் யோகினி பீட நடவடிக்கையில் முன்னிலை வகித்து வந்த இவர் பிராண பிரியாவின் வலதுகரமாக இருந்தவர். சில வாரங்களாக தான் ஆசிரமத்தில் இருந்து கைலாசத்திற்க்கு செல்வதாக கூறிக் கொண்டே இருந்தார். சில மாதங்களுக்கு முன்பு மாயமான அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
எங்கு சென்றார் என்பது மர்மமாக இருந்தது. இந்நிலையில், நேபாள எல்லைக்கு அருகே இருக்கும் ஒரு பகுதியில் மர்மமான முறையில் ஆதரவற்று சடலமாக இறந்து கிடந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த நித்தியானந்தா சீடர்கள் மற்றும் பக்தர்கள் அந்த உடலை பெற்று ஆசிரமத்திற்கு எடுத்துச் சென்றுள்ளனர்.
குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்காமல் உடலை வேகவேகமாக தகனம் செய்ததாக கூறப்படுகின்றது. எனவே அவரது மரணத்தில் சந்தேகம் ஏற்ப்பட்டுள்ளட்டது. இவர் பலியான சம்பவத்தை அறிந்த குடும்பத்தினர் கடும் அதிர்ச்சியில் இருக்கின்றனர். காவல்துறையினர் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
in nithyandha fan died in nepal border