14 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 13 வயதுடைய சிறுவன்.! பிறந்த ஆண் குழந்தை., அதிர்ச்சியான மருத்துவர்கள்.!! வெளியான பேரதிர்ச்சி தகவல்.!!  - Seithipunal
Seithipunal


இந்த உலகில் பலவிதமான விசித்திர நிகழ்வுகள் நிகழ்ந்து கொண்டு வருகிறது., அவ்வாறு நடைபெறும் விசித்திரமான நிகழ்வுகள் சில ஆச்சரியப்படுத்தும் வகையிலும் சில அனுதாபத்தை ஏற்படுத்தும் வகையிலும் இருக்கிறது. 

இந்தியாவில் பொதுவாக ஒரு காலகட்டத்திற்கு முன்னதாக இளம் வயதிலேயே பெண்ணிற்கும் - ஆணிற்கும் திருமணம் முடிக்கும் நிகழ்வானது நடந்து கொண்டு வந்தது. பின்னர் வந்த ஆங்கிலேயரின் ஆட்சிக்கு பின்னர் இந்தியா சுதந்திரம் அடைந்தது., பெண்களின் திருமண வயது மற்றும் ஆண்களின் திருமண வயது அதிகரிக்கப்படும் சட்டபூர்வமாக பட்டது. 

இதன் மூலமாக குறைந்த வயதுள்ள பெண்ணை திருமணம் செய்வது சட்டப்படி குற்றமாக இந்தியாவில் கருதப்படுகிறது., இந்த நிலையில் நேபாளம் நாட்டில் 14 வயதுடைய சிறுமி காதலித்து குழந்தை பெற்றுள்ள சம்பவமானது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. 

நேபாளம் நாட்டில் உள்ள ரூபி வேலி பகுதியைச் சார்ந்த 14 வயதுடைய சிறுமியின் பவித்ரா தாமங்., அதே பகுதியை சேர்ந்த 13 வயது சிறுவனின் பெயர் ரமேஷ் தாமங். இவர்கள் இருவரும் அங்குள்ள பள்ளியில் பயின்று வந்த நிலையில்., இருவருக்கும் இடையே ஏற்பட்ட நட்பு ரீதியான பழக்கமானது காதலாக மலர்ந்துள்ளது. 

இதனையடுத்து இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில் நெருங்கி பழகியுள்ளனர்., இதன் காரணமாக பவித்ரா கர்ப்பமடைந்துள்ளார். இந்த நிலையில்., பவித்ராவின் நடவடிக்கையில் உள்ள வித்தியாசத்தை கண்டு சந்தேகத்தை பெற்றோர்கள்., இவரை மருத்துமனைக்கு அழைத்துச் சென்று சோதனை செய்ததில் அவர் கர்ப்பமாக இருந்தது தெரிய வந்துள்ளது. 

இதனையடுத்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இது குறித்த விவரம் குறித்த விசாரணையை மேற்கொண்ட நிலையில்., ரமேஷ் மற்றும் பபித்ரா காதலித்து வந்த நிலையில் ஒரு நாள் நெருங்கி பழகிய இந்த சம்பவமானது அரங்கேறியது தெரியவந்துள்ளது. இதனையடுத்து பவித்ரா தற்போது ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். 

அதனால் 14 வயது மாணவி 13 வயது சிறுவன் மூலமாக குழந்தையை பெற்றெடுத்து தாயாகி உள்ளார் என்ற செய்தி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இவர்களின் குடும்பத்தினர் இருவரும் பேச்சு வார்த்தை நடத்தி திருமணம் செய்ய ஏற்பாடு செய்த நிலையில்., நேபாள நாட்டின் சட்டப்படி பெண்ணிற்கு திருமணத்திற்கு வயது இருபதாக வேண்டும். 

இந்த செய்தியை அறிந்த அங்குள்ள மாவட்ட ஆட்சியர் இந்த விவாதத்தில் தலையிட்டு., இரு வீட்டாரிடமும் பேச்சுவார்த்தை திருமணத்தை தள்ளி வைத்துள்ளார். இந்த சம்பவமானது அந்த பகுதியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Nepal a 14 year girl pregnant by 13 year old boy and delivery a male baby


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->