கழிவறையின் ஜன்னலை உடைத்து தப்பி சென்ற விசாரணை கைதி... வலைவீசி தேடும் காவல்துறை.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை சிவாஜி நகர் காவல் நிலையத்தில் திருட்டு வழக்கு தொடர்பாக முகமது இம்ரான் என்ற 24 வயதுடைய வாலிபரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

இதன்பின்னர் நேற்று முன்தினம் கழிவறைக்கு செல்வதாக கூறிய கைதி, கழிவறைக்கு சென்றுள்ளான். இந்த நிலையில், கழிவறையின் ஜன்னலை உடைத்து காவல் நிலையத்தின் முதல் மாடியில் இருந்து கீழே குதித்து தப்பி ஓடியுள்ளான். 

அந்த பகுதியில் இருக்கும் பிற கட்டிடத்தில் உள்ள மக்கள், காவல் நிலையத்தில் இருந்து கைதி தப்பி செல்வதை கண்டு காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து காவல் துறையினர் விரைவதற்குள் முகமது இம்ரான் தப்பி சென்றுள்ளான்.

தப்பி சென்ற இம்ரானை காவல் துறையினர் தேடிக்கொண்டு வரும் நிலையில், இவன் தப்பி செல்லும் நேரத்தில் அக்கம் பக்கத்தினர் மேல் தளத்தில் இருந்து விடியோவாக பதிவு செய்துள்ளனர். இந்த வீடியோ அங்குள்ள சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. மேலும், இவனிடம் சந்தேகத்தின் பேரில் விசாரணை மேற்கொண்டு மேற்கொண்டு வந்ததால் கைது செய்யப்படாமல் இருந்துள்ளான். இவனை தற்போது தீவிரமாக தேடி வருகின்றனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in mumbai thief escape form police station


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->