ஓட்டுனரை வற்புறுத்திய அதிகாரி.! வரமறுத்ததால் ஆத்திரத்தில் கற்பழிப்பு..!
in mumbai taxi driver sexual harassment by police officer
மும்பை சி.எஸ்.எம்.டி அருகே டாக்சி டிரைவர் ஒருவர் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த பொழுது கற்பழிக்கப்பட்ட சம்பவமானது நிகழ்ந்துள்ளது.
மும்பையின் கிரானைட் ரோடு பகுதியில் இருக்கும் விபச்சார கூடம் ஒன்றிற்கு ரெயிடுக்கு வருமாறு அந்த டாக்சி டிரைவரை அமித் தங்கட் என்ற ஆர் பிஎஃப் கான்ஸ்டபிள் அழைத்து இருக்கின்றார்.
ஆனால் அந்த டாக்சி டிரைவர் மறுத்து இருக்கின்றார். இதன் காரணமாக ஆத்திரம் அடைந்த கான்ஸ்டபிள் அவரை கொடூரமாக தாக்கி ரயில்வே வளாகத்தில் இருக்கும் ஒதுக்குப்புறமான இடத்திற்கு இழுத்துச் சென்று இயற்கைக்கு மாறான முறையில் அவருடன் உடலுறவு மேற்கொண்டு இருக்கின்றார். அதன் பின்னர் பாதிக்கப்பட்ட அவரை அங்கேயே விட்டுவிட்டு அவருடைய பணம் டாக்ஸி மற்றும் பல உடமைகளை பறித்துக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து காவல் நிலையத்தில் அந்த ஓட்டுநர் புகார் அளித்ததில் விசாரணை நடைபெற்று வருகின்றது. இந்த விசாரணை முடிவில் குற்றம் சாட்டப்பட்ட அதிகாரி கைது செய்யப்பட்டார். இந்த மோசமான செயலின் காரணமாக கான்ஸ்டபிள் தன்னுடைய பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருக்கின்றார்.
மேலும், தீவிர தொடர்ந்து காவல்துறை சார்பில் விசாரணை நடைபெற்று வருகின்றது. ஒரு ஆணே இன்னொரு ஆணை கற்பழித்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.
English Summary
in mumbai taxi driver sexual harassment by police officer