கவனிக்க ஆளில்லாமல் விண்ணுலகம் சென்ற பின்னர்., மனைவிகளுக்குள் குழாய் சண்டை..!! ரூ.200 கோடிக்கு தரமான சம்பவம்.!!
in mumbai man died wife fight for land property
இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை நெப்பியன்சி சாலை பகுதியைச் சார்ந்தவர் ஜவேரி. இவருக்கு மொத்தம் 2 மனைவிகள் உள்ளனர். இந்த நிலையில்., கடந்த 2013 ஆம் வருடத்தில் ஜவேரி திடீரென காலையில் காணாமல் போயுள்ளார்.
இவரை காணாது பதறிப்போன குடும்பத்தினர் அக்கம்பக்கத்தினரிடம் விசாரித்த நிலையில்., இவரை எங்கு தேடியும் காணததால் இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இவரின் புங்கரை ஏற்ற காவல் துறையினர்., இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில்., இவரை அங்குள்ள காந்திவெளி பகுதியில் வைத்து கண்டறிந்துள்ளனர்.
மேலும்., அந்த சமயத்தில் இவர் நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு நடக்க முடியாமல் இருந்துள்ளார். இதனையடுத்து இவரை அவரது இரண்டு மனைவிகள் மற்றும் மகன்கள் கவனிக்காமல் விட்டு சென்றுள்ளனர்.
இந்த தருணத்தில்., மும்பை நகரில் உள்ள ஜெ.ஜெ.மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர் சிகிச்சை பெற்றுக் கொண்டு வந்திருந்தார். பின்னர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இவரின் மறைவிற்கு பின்னர் ரூ.200 கோடி சொத்திற்காக முதல் மற்றும் இரண்டாவது மனைவி சண்டையிட்டு வந்துள்ளனர். இவர்களின் சண்டை வீட்டோடு நிற்காமல் வீதியிலும் வந்து அவ்வப்போது சண்டையிட்டுள்ளனர்.
தற்போது இந்த குடும்ப சண்டையானது காவல் நிலையம் வரை சென்றுள்ளது. இவர்கள் இருவரும் சொத்தில் உரிமைகொண்டாடி., காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளனர். இவர்களின் புகார் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
in mumbai man died wife fight for land property