ஒரு கிளாஸ் பாலில், கணவனின் ஜோலியை முடித்த மனைவி... விசாரணையில் அதிர்ந்துபோன காவல்துறையினர்.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை மலாடு பகுதியை சார்ந்த தனியார் சொகுசு பேருந்து ஓட்டுநர் மகேஷ் (வயது 35). இவரது மனைவியின் பெயர் உஜ்வாலா (வயது 28). இவர் கடந்த டிசம்பர் மாதத்தின் போது மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். 

இவரது மரணத்திற்கு மகேஷ் மாரடைப்பின் காரணமாக உயிரிழந்து விட்டதாக கூறி, மருத்துவரிடம் போலியான சான்றிதழை பெற்று கணவரின் உடலை தகனம் செய்துள்ளார். இந்த தருணத்தில், உஜ்வாலா அவரது கள்ளக்காதலன் தாஸ் (வயது 25) மற்றும் அவரது நண்பர் சாகர் (வயது 28) ஆகியோரால் மகேஷ் கொலை செய்யப்பட்டதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து சந்தேகத்தின் பேரில் காவல் துறையினர் சாகரை கைது செய்து மேற்கொண்ட விசாரணையில், கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மகேஷ் கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. இந்த கொலை திட்டத்திற்கு சம்பவத்தன்று கணவருக்கு உஜ்வாலா தூக்க மாத்திரையை பாலில் கலந்து கொடுத்துள்ளார். பின்னர் மயக்கத்தில் இருந்த கணவனின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். 

இந்த வழக்கு விசாரணையில் தூக்க மாத்திரை வாங்கி கொடுத்த சாகர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தலைமறைவாக இருந்துவந்த உஜ்வாலாவை காவல் துறையினர் நேற்று கைது செய்தனர். கைதான நபர்களிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், இயற்கை மரணம் என்று கூறி சான்றிதழ் அளித்த மருத்துவரையும் காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in mumbai husband murder by wife due to illegal affair


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->