மனைவியின் கை கால்களை கட்டிப்போட்டு கணவன் செய்த கொடூர காரியம்.! இரத்த வெள்ளத்தில் நிறைந்த வீடு..!! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிராவில் உள்ள தானே மாவட்டம் கல்யாண் நகரில் இருக்கும் உமரேகாவ் பகுதியை சார்ந்தவர் விக்ரம் குமார். இவரது மனைவியின் பெயர் ரேகா. விக்ரம் குமார் ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வரும் நிலையில்., தனது மனைவியின் மீது அடிக்கடி சந்தேகம் அடைந்து வந்துள்ளான். 

இதன் காரணமாக கணவன் - மனைவி இருக்குவருக்குள்ளும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில்., சம்பவத்தன்று விக்ரம் குமார் சொந்த ஊருக்கு செல்வதாக கூறி., மனைவியை அழைத்துள்ளார். இதனை ஏற்க மறுத்த மனைவி கணவருடன் வருவதற்கு மறுத்துள்ளார். 

suicide attempt, killed, murder, கொலை, தற்கொலை, குற்றம்,

இதனால் இவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்படவே., ஆத்திரமடைந்த விக்ரம் குமார் - ரேகாவின் கை, கால்களை கட்டிப்போட்டு கழுத்தை அறுத்து துடிதுடிக்க கொலை செய்து சம்பவ இடத்தில் இருந்து தப்பியுள்ளான். 

இந்த சமயத்தில்., ரேகா உயிருக்கு போராடி அலறவே., இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டிற்கு விரைந்த சமயத்தில்., ரேகா இரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். 

arrest, police arrest, hand chain, police hand cap, கைது,

தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து., உயிரிழந்த ரேகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும்., இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில்., விக்ரம் உத்திரப்பிரதேசத்திற்கு தப்பி சென்றது தெரியவந்தது. 

உத்திரபிரேதேசத்திற்கு தப்பி சென்ற விக்ரம் அங்குள்ள சாருசவுரா கிராமத்தில் தங்கியிருப்பதாக தகவல் கிடைத்ததை அடுத்து., சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் விக்ரமை கைது செய்து கல்யாணிற்கு அழைத்து வந்து நீதிமன்றத்தில் சம்பர்ப்பித்தனர். இதற்கு பின்னர் விக்ரமை நீதிமன்ற காவலில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Mumbai husband killed her wife to doubts


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->