கள்ளக்காதலனுடன் இன்ப சுற்றுலா சென்ற மனைவியை தேடி சென்று கணவன் செய்த காரியம்.! ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து சரிந்த சோகம்.!! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை காமோட்டே பகுதியை சார்ந்தவர் கிருஷ்ணா மாத்ரே (வயது 28). இவர் ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவியின் பெயர் கவிதா. இவர்கள் இருவரும் தங்களின் இல்லத்தில் வசித்து வந்துள்ளனர். 

இவர்களின் இல்லத்திற்கு அருகில் நிதீஷ் என்ற வாலிபர் வசித்து வந்துள்ளார். இந்த வாலிபருக்கும் - கவிதாவுக்கும் இடையே ஏற்பட்ட பழக்கமானது நாளடைவில் கள்ளக்காதலாக மாறவே., இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். 

இந்த கள்ளக்காதல் பழக்கமானது கிருஷ்ணாவிற்கு தெரியவரவே., தனது மனைவியை முறையற்ற பழக்கத்தை கைவிட கூறி முறையிட்டுள்ளார். இவரது பேச்சையும் கண்டுகொள்ளாமல் நிதீஷுடன் வெளியே சென்றுள்ளார். 

இவர்கள் இருவரும் அங்குள்ள கடேஸ்வர் இரயில் நிலைய பகுதியில் இருந்ததை அறிந்த கிருஷ்ணா., அவரது சகோதரரை அழைத்து கொண்டு இருவரும் இருந்த இடத்திற்கு சென்று இருவரையும் கத்தியால் குத்தியுள்ளார். 

இதனால் நிலைகுலைந்த இருவரும் சரிந்து விழவே., இவர்களை மீட்ட அப்பகுதி மக்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்படவே., இது குறித்த வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் கிருஷ்ணா மற்றும் அவரது சகோதரரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in mumbai husband killed her wife due to his wife illegal affair


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->