கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அதிரடி கைது.!! - Seithipunal
Seithipunal


இந்த உலகம் முழுவதும் பெண்களுக்கு எதிரான பல அநீதிகள் நடந்து வரும் நிலையில்., எப்படியாவது படித்து முன்னேறிவிட வேண்டும் என்ற முனைப்புடன் இருக்கும் மாணவிகளுக்கு தொடர்ந்து பாலியல் ரீதியிலான துன்புறுத்தல் வழங்கப்படும் சம்பவமானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சந்திராப்பூர் மாவட்டம் பகுதியில் உள்ள ராஜூரா பகுதியை சார்ந்தவர் சுபாஷ் தோதெ. இவர் காங்கிரஸ் கட்சியில் முக்கிய பதவியில் இருந்து வரும் நிலையில்., முன்னாள் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். 

இவர் அங்குள்ள பகுதியில் நர்சிங் கல்லூரி ஒன்றை நடத்தி வரும் சூழலில்., இவரின் கல்லூரியில் இவரின் உறவினர் பெண் ஒருவர் பயின்று வந்துள்ளார். இந்த நிலையில்., மாணவியை பாலியல் உறவுக்கு வலுக்கட்டாயமாக பலவந்தமாக அழைத்து வந்துள்ளார். 

ஒரு சமயத்தில் மேல் இவரின் தொல்லைகள் தாங்க முடியாமல்., மாணவி அந்த கல்லூரியில் இருந்து விலகி பின்னர் வேறு கல்லூரியில் சென்று பயின்று வருகிறார். இந்த நிலையில்., இதனை அறிந்த சுபாஷ் மாணவிக்கு தொடர்ந்து பாலியல் ரீதியிலான தொல்லைகளை வழங்கி வந்துள்ளார். 

இவரின் தொல்லைகளை தங்க இயலாத மாணவி காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எம்.ஏ மற்றும் அவரது கல்லூரியின் செயலாளர் ஆகியோர் மீது அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இவரின் புகாரை ஏற்ற காவல் துறையினர்., இது குறித்து விசாரணை மேற்கொண்டு இருவரையும் கைது செய்தனர். 

இவர்கள் இருவரையும் கைது செய்த காவல் துறையினர்., நீதிபதியின் முன் இவர்களை சமர்ப்பித்து பின்னர் மாணவிக்கு பாலியல் தொல்லை வழங்கியதை ஒப்புக்கொண்டதை அடித்து., இவர்கள் இருவரையும் விசாரணை செய்ய கூறி நீதிபதி உத்தரவிட்டார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in mumbai girl sexual harassment congress ex.mla arrest by police


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->