கணவனுடன் சண்டையிட்டு சென்ற பெண்.. டெம்போ ஓட்டுனர்கள் கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்த கொடூரம்.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சிஞ்ச்வட் பகுதியை சார்ந்த இளம்பெண்ணொருவர் கடந்த 11 ஆம் தேதியன்று தனது கணவரிடம் சண்டையிட்டு வீட்டில் இருந்து வெளியேறியுள்ளார். 

இதன்பின்னர் எங்கு செல்வது என்பது தெரியாமல் திணறிய நிலையில், இரவு சுமார் 11 மணியின் போது சாலையில் தனியாக நடந்து சென்றுள்ளார். இவர் செல்லும் சாலையில் டெம்போ வேன் ஒன்று வந்திருந்துள்ளது. 

இந்த டெம்போவை நிறுத்திய பெண்மணி தனது இல்லத்தின் முகவரியை கூறி தன்னை இல்லத்தில் விட்டுவிடுமாறு கூறியுள்ளார். பெண்ணின் நிலையை அறிந்த காமுகர்கள் தங்களின் நயவஞ்சக எண்ணத்தை அரங்கேற்ற அமைதியாக வேனில் ஏற்றியுள்ளனர். 

பின்னர் டெம்போ வேனை இயக்கி சென்று வாகனத்தில் இருந்த கிளீனர் மற்றும் ஓட்டுநர் பெண்ணை மிரட்டி கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இரவு முழுவதும் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு, காலை 4 மணியளவில் சாலையில் விட்டுவிட்டு சென்றுள்ளனர். 

இதனால் பாதிக்கப்பட்ட பெண்மணி அங்குள்ள காவல் நிலையத்திற்கு சென்று நடந்ததை கூறி அழுதுள்ளார். இதனையடுத்து இது குறித்து வழக்குப்பதிவு செய்து அங்குள்ள கண்காணிப்பு கேமிராக்களை சோதனை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Mumbai girl sexual abuse by drivers police investigation


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->