காதலனை வீட்டிற்கு வரவழைத்து பேசிக்கொண்டு இருந்த காதலி.. திடீரென வந்த அம்மா.. பதற்றத்தில் அரங்கேறிய பெரும் சோகம்.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை குர்லாபாயில் பஜார் பகுதியில் குடியிருப்பு கட்டிடம் உள்ளது. இந்த குடியிருப்பு கட்டிடத்தின் முதல் தளத்தில் 17 வயதுடைய சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். 

இந்த நிலையில், சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நிலையில், சிறுமிக்கு சுனில் என்ற 20 வயது காதலன் இருந்துள்ளார். இதனையடுத்து சிறுமி தனது காதலனுடன் நேரத்தை செலவிட முடிவு செய்து, காதலனை தனது இல்லத்திற்கு அழைத்துள்ளார். 

இருவரும் வீட்டில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்த நிலையில், சிறுமியின் தாயார் எதிர்பாராத விதமாக வீட்டிற்கு வருகை தந்துள்ளார். இதனையடுத்து சிறுமி பதற்றத்தில் செய்வதறியாது காதலனோடு முதல் மாடியில் இருந்து கீழே குதித்துள்ளார். 

இதனால் சிறுமியின் கால்கள் சம்பவ இடத்திலேயே முறிந்துள்ள நிலையில், கால் முறிந்த விஷயம் தொடர்பாக சிறுமியிடம் குடும்பத்தினர் விசாரித்த நேரத்தில் உண்மை வெளிவந்துள்ளது. இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இது குறித்த புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து சுனிலை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Mumbai girl jumps from first floor when mom come home enjoy with boy friend


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->