நண்பனின் சவாலை ஏற்று பெண்ணிற்கு முத்தம் கொடுத்த போதை காமுகன்.! காவல் நிலையத்தில் செம கதறல்..!! - Seithipunal
Seithipunal


இந்த உலகம் முழுவதும் பெண்களுக்கு எதிரான கொடூரங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது போன்ற குற்றங்களை குறைக்க., நமது சட்டங்கள் அதிரடியாக கடுமையாக மாறும் பட்சத்தில்., பெண்களுக்கு எதிரான அநீதிகளில் இருந்து பாதுகாக்க இயலும் என்பதே மக்களின் விருப்பமாக உள்ளது. 

பெண் பிள்ளைகளை நாம் படிக்கவும்., பணிக்காகவும் வெளியே அனுப்பும் சமயத்தில்., நாடக காதல் மற்றும் ரோடு சைடு ரோமியோ என்ற பெயரில் இருக்கும் காம கொடூரன்கள் பல விதமான தொல்லைகளை வழங்கி வருகின்றனர். மேலும்., பிராங்க் என்ற பெயரில் அரங்கேறிய கொடூரமும் நாம் அறிவோம். 

இந்த நிலையில்., புதுச்சேரி மாநிலத்தில் உள்ள ரெயின்போ நகர் பகுதியை சார்ந்தவர் லாவண்யா. இவர் மும்பையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வர்த்தக மேலாளராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று வழக்கம்போல பணிக்கு சென்று விட்டு., பணி முடிந்ததும் வீட்டிற்கு திரும்பியுள்ளார். 

drama love, நாடக காதல்,

இந்த சமயத்தில்., இவரை பின் தொடர்ந்தவாறு இளைஞர்கள் இருவர் பின்னாலேயே வந்துள்ளனர். இவர்களை கவனிக்காத பெண்., வழக்கம் போல சாலையில் வந்து கொண்டு இருந்த சமயத்தில்., பெண்ணின் வீட்டிற்கு அருகே வந்த போது., வாகனத்தில் வந்த இளைஞன் எதிரே நடந்து வந்துள்ளான். 

வானகத்தில் இருந்து இறங்கி நடந்து வந்த கொடூரன்., பெண்ணிற்கு திடீரென முத்தமிட்டுள்ளான். இதனை எதிர்பார்க்காத பெண் அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டதை அடுத்து., பயந்துபோன இருவரும் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். பின்னர் இது குறித்து தனது பெற்றோருக்கு தெரிவித்துள்ளனர். 

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். மேலும்., இது குறித்து அம்மாநில ஆளுநருக்கும் வாட்சப் மூலமாக தகவலை அனுப்பியுள்ளார். இதனையடுத்து காவல் துறையினர் அங்குள்ள கண்காணிப்பு கேமிராக்களை சோதனை செய்தனர். 

sexual harassment, sexual abuse, sexual torture, rapped, பாலியல் வன்கொடுமை,

அந்த சோதனையில்., இவர்கள் இருவரும் அங்குள்ள மொட்டுத்தோப்பு பகுதியை சார்ந்த ரிஷி மற்றும் அவனது நண்பன் என்பது தெரியவந்தது. இதனையடுத்து ரிஷியை கைது செய்த காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில்., இருவரும் மது அருந்திவிட்டு வரும் வழியில் பெண்ணை பார்த்தோம். 

இந்த சமயத்தில்., எனது நண்பன் என்னிடம் "அந்த பெண்ணிற்கு உன்னால் முத்தம் கொடுக்க முடியுமா? என்று பந்தயம் கட்டினான். இதனையடுத்து நான் சவாலை ஏற்று., பெண்ணிற்கு முத்தம் கொடுத்து., சவாலில் வெற்றியடைந்தேன்" என்று கூறியுள்ளான். இனி இதனை போன்று செய்யமாட்டேன்., என்னை விட்டுவிடுங்கள் என்று கதறியுள்ளான்.. இதனையடுத்து இவனுடன் இருந்த நண்பனையும் காவல் துறையினர் தேடி வருகின்றனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in mumbai culprit arrested by police cried in police station


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->