குடும்பம் நலம் பெரும் என்று தாயை சீரழித்து., சிறுமியையும் சூறையாடிய காம மந்திரவாதி.! நீதிமன்றத்தின் பரபரப்பு தீர்ப்பு.!!
in mumbai court order jail for sexual harassment culprit
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பையை சார்ந்த பெண்மணி தனது கணவருடன் வசித்து வந்துள்ளார். பெண்மணியின் கணவர் தினமும் மது அருந்திவிட்டு., வீட்டின் செலவுக்கு பணம் தராமல் இருந்து வந்துள்ளார்.
இதனால் கடுமையான மன உளைச்சலுக்கு உள்ளான பெண்மணி., இப்பகுதியை சார்ந்த 42 வயதுடைய மந்திரவாதி ஒருவரை அணுகி தனது நிலையை கூறி விளக்கமளித்துள்ளார்.
இதனையயடுத்து மந்திரவாதி தான் கூறுவது போல நடந்தால் குடும்பத்தில் உள்ள கஷ்டங்கள் அனைத்தும் தீர்ந்துவிடும்., செல்வங்கள் பெருக்கும் என்று பல ஆசை வார்த்தைகளை கூறியுள்ளார்.
இதனையடுத்து அவ்வப்போது பெண்ணை வளவலைப்பது பூஜை செய்வதாக தெரிவித்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். இந்த நேரத்தில்., மந்திரவாதியின் பேச்சிற்கு அதிகளவில் மயங்கிய பெண்மணி அங்கயே இருந்து வந்துள்ளார்.
இந்த சமயத்தில்., மந்திரவாதி பெண்ணிடம் உனது 12 வயதாகும் மகள் புத்திகூர்மை இல்லாமல் இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும்., அவருக்கும் சிறப்பு பூஜை நடத்தினால் அனைத்தும் சரியாகிவிடும் என்றும் கூறியுள்ளான்.
இதனை நம்பிய தாயாரும் மந்திரவாதியின் இல்லத்திற்கு சிறுமியை அழைத்து வரவே., சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். இக்கொடூரம் கடந்த 2017 ஆம் வருடத்தின் ஆகஸ்ட் மாதத்தில் நடைபெற்றது.
இந்த விஷயத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி அக்கம்பக்கத்தினர் உதவியோடு காவல் நிலையத்தில் புகாரளித்த நிலையில்., இது குறித்த வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு மந்திரவாதியை கைது செய்தனர்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை அங்குள்ள நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில்., மந்திரவாதியின் மீதான குற்றம் உறுதி செய்யப்பட்டு சுமார் 12 வருட சிறை தண்டனை விதிக்கப்படுவதாக இன்று தீர்ப்பு வெளியாகியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
in mumbai court order jail for sexual harassment culprit