கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆட்டோ ஓட்டுநர்.. சாமர்த்தியமாக தப்பித்து, ஆட்டோ ஓட்டுனரை கதறவைத்த மாணவி.!! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பையை சார்ந்த கல்லூரி மாணவி அங்குள்ள எஸ்.வி கல்லூரியில் பயின்று வருகிறார். இவர் தினமும் கல்லூரிக்கு செல்வது போல சம்பவத்தன்றும் கல்லூரிக்கு சென்றுள்ளார். 

காலை சுமார் 7.30 மணியளவில் அங்குள்ள ஆட்டோவில் எரிய மாணவி பயணத்தை துவங்கியுள்ள நிலையில், ஆட்டோ ஓட்டுநர் மாணவியை அவதூறாக பார்த்துக்கொண்டே வந்துள்ளார். மேலும், இதனை முதலில் கவனிக்காத மாணவி, பின்னர் சுதாரித்து காமுகனின் எண்ணத்தை அறிந்துகொண்டுள்ளார். 

பின்னர் தான் உடையணிந்த நிலையிலும், தன் கைகளில் இருந்த புத்தகப்பையை வைத்து தனது உடலை மீண்டும் மறைத்துக்கொண்டு ஆட்டோவை நிறுத்தக்கூறி வற்புறுத்தியுள்ளார். இதனையடுத்து அங்குள்ள சிக்னலில் வாகன நெரிசலால் ஆட்டோ நின்றுள்ளது. 

இதனையடுத்து ஆட்டோவில் இருந்து இறங்கிய மாணவி மற்றொரு ஆட்டோவின் மூலமாக கல்லூரிக்கு பயணம் செய்துள்ளார். இதுமட்டுமல்லாது ஆட்டோ ஓட்டுநர் மாணவியிடம் அவதூறாக பேசி வாக்குவாதம் செய்துள்ளான். 

இந்த கொடூரத்தை மாணவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்கு இப்படி நடந்துள்ளது என்று கூறி பதிவு செய்யவே, இதனை கண்ட நபரொருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்து மும்பை காவல் துறையினரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார். 

இதனையடுத்து இது தொடர்பான பதிவை கண்ட காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, மாணவியிடம் அத்துமீறிய ஆட்டோ ஓட்டுனரை கைது செய்துள்ளனர். இது தொடர்பான தகவல் ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்து செய்யப்பட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in mumbai college girl sexual torture police arrest culprit


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->