பெண் குழந்தையின் தாயே விபசாரத்தில் ஈடுபட்ட சோகம்.! சாதுர்யமாக தப்பித்து., தாய்க்கு தண்டனை கொடுத்த மகள்..!!
in Mumbai child girl forced to prostitution police arrest gang
இந்தியாவில் பெண்களுக்கு எதிரான அநீதிகள் தொடர்ந்து வருகிறது. நாடக காதல்., பாலியல் வன்கொடுமை., வரதட்சணை பிரச்சனை என பல விதமான பிரச்சனைகள் காரணமாக கடுமையான அவதியடைந்து வரும் நிலையில்., பெண்களுக்கு தெரிந்த மற்றும் பழகிய நபர்களாலேயே இதனை போன்ற கொடூரம் அரங்கேறுவது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில்., மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள காமத்திபுரா பகுதியை சார்ந்த பெண்மணியின் பெயர் ரீனா (வயது 45). இவர் ராஜஸ்தானில் வசித்து வரும் நிலையில்., நவிமும்பையில் இவருடைய கணவருடன் 22 மகள் வசித்து வந்தார்.
இந்த நேரத்தில்., 22 வயதுடைய ரீனாவின் மகள் ராஜஸ்தானுக்கு சென்ற சமயத்தில்., தாயாரின் இல்லத்தில் 14 வயதுடைய சிறுமியும் இருந்துள்ளார். இந்த சிறுமியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில்., ரீனா சிறுமியை வைத்து விபச்சாரம் செய்து பணம் சம்பாரிப்பது தெரியவந்தது. இதனையடுத்து ரீனாவின் மகள்., பாதிக்கப்பட்ட சிறுமியையும் அழைத்து கொண்டு மும்பைக்கு வந்தார்.
அந்த விசாரணையில்., சிறுமி தனது ஏழு வயதில் மிரோரோடு பகுதியில் பூ விற்பனை செய்து வந்த சமயத்தில்., சம்பவத்தன்று ரீனா மற்றும் அவருடன் வந்த ஏழு பேர் சிறுமியை இரயிலில் கடத்தி வந்து., காமத்திபுராவிற்கு அழைத்து சென்று பின்னர் இராஜஸ்தானுக்கு அழைத்து சென்று வீட்டு வேலைகள் செய்து வந்ததும் தெரியவந்தது.
மேலும்., சிறுமிக்கு 14 வயதானவுடன் விபசாரத்தில் வலுக்கட்டாயமாக தள்ளியதும் தெரியவந்தது. இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த ரீனாவின் மகள் இது குறித்து அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து இது குறித்த வழக்குப்பதிவை ஏற்ற காவல் துறையினர் சிறுமியை மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுமிக்கு பாலியல் ரீதியிலான தொந்தரவு அளிக்கப்பட்டுள்ளதை உறுதி செய்ததை அடுத்து., காவல் துறையினர் ரீனா மற்றும் அவரின் சகோதரர் சஞ்சய் ஆகியோரை கைது செய்து., மேற்கொண்ட விசாரணையில் மேலும் இரண்டு பெண்களை கைது செய்தனர். தலைமறைவாக இருந்த மூவரையும் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
in Mumbai child girl forced to prostitution police arrest gang