பாஜக பிரமுகர் குடும்பத்தோடு கொலை..! நள்ளிரவில் அரங்கேறிய வெறியச்செயல்..!!
in Mumbai bjp party member killed by unknown members
இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பூஷாவால் நகரில் இருக்கும் பகுதியில் வசித்து வரும் பாரதிய ஜனதா கட்சியின் உள்ளூர் தலைவரின் பெயர் ரவீந்திர காரத். இவர் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே இருந்த சமயத்தில்., அடையாளம் தெரியாத நபர்களால் திடீரென சரமாரியாக சுடப்பட்டார்.
இதில் படுகாயம் அடைந்த அவர்., ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். இந்த நிலையில் இவரின் அலறல் சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்., உடனடியாக வெளியே வந்து பார்த்தனர். இந்த சமயத்தில்., இவரது குடும்பத்தினர் ஐந்து பேரும் இதனைப் போன்றே துப்பாக்கியால் சரமாரியாக சுட்டு கொலை செய்யப்பட்டனர்.
இதற்கு பின்னரும் ஆத்திரம் தீராத மர்ம நபர்கள் அவர்களின் மீது கொடூர முறையில் நடத்திக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இங்கு நடந்த துப்பாக்கி சத்தம் கேட்டு அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர்., காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே., தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள துவங்கினர். இந்த விசாரணையில்., தற்போது 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில்., அவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும்., பாரதிய ஜனதா கட்சியின் உள்ளூர் தலைவர் மற்றும் அவரது குடும்பத்தினரை மர்ம நபர்கள் கொலை செய்தது அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
in Mumbai bjp party member killed by unknown members