நான்கு வயது பெண் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து., பிறப்புறுப்பில் சூடு வைத்த காம கொடூர மாமன்.!!
in mumbai 4 year child sexual harassment by her uncle and fired up birth part
இந்த உலகம் முழுவதும் பெண்களுக்கு எதிரான பல தொடர் அநீதிகள் நடைபெற்று வருகிறது. அவ்வாறு நடைபெறும் அநீதிகள் பெண்களுக்கு தெரியாத நபர்களால் ஏற்படும் அநீதிகளை காட்டிலும்., பெண்களுக்கு நன்றாக தெரிந்த மற்றும் பழகிய நபர்களாலேயே வழங்கப்பட்டு வருகிறது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பையில் போரவில்லை என்ற பகுதியானது உள்ளது. இந்த பகுதியில் வசித்து வரும் தம்பதிக்கு நான்கு வயதுடைய குழந்தை இருக்கும் நிலையில்., ஏழ்மையான குடும்பம் என்பதால் இருவரும் பணிக்கு சென்று வரும் வழக்கத்தை வைத்துள்ளனர்.
இந்த நேரத்தில்., இவர்களின் நான்கு வயது மகளை அவரின் பாட்டி வீட்டில் தங்க வைத்து செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர். இந்த சமயத்தில்., சிறுமி வீட்டில் தனியாக இருந்த சமயத்தில்., சிறுமியின் மாமன் முறையுள்ள திருமணம் முடிந்த இளைஞன் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளான்.
இந்த நிலையில்., தாயார் வீட்டிற்கு திரும்பிய நிலையில் சிறுமி சோர்வாக அம்மா வலிக்கிறது என்று கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த தாயார் சிறுமியிடம் விசாரிக்கவே., தனது பிறப்புறுப்பை காட்டியுள்ளார்.
சிறுமியின் பிறப்புறுப்பில் தீக்காயம் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த தாயார்., அங்குள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்று சோதனை செய்ததில்., சிறுமிக்கு பாலியல் தொல்லை வழங்கப்பட்டு., சிறுமியின் பிறப்புறுப்பில் சூடு வைக்கப்பட்டது தெரியவந்தது.
இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாயார்., இது குறித்து சிறுமியிடம் விசாரிக்கவே சிறுமி தனது மாமா வீட்டில் தனியாக இருந்த சமயத்தில்., தன்னிடம் செய்த கோர செயலை கூறி., பின்னர் சூடு வைத்ததை கூறியுள்ளார்.
இந்த விஷயத்தை கேட்டு பெரும் அதிர்ச்சிக்கு உள்ளான தாயார் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து., இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணையை மேற்கொண்ட நிலையில்., புகாரை வாபஸ் பெற கூறி மிரட்டலும் விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணையை காவல் துறையினர் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
in mumbai 4 year child sexual harassment by her uncle and fired up birth part