அரசு உத்தரவை மீறி வெளியே சென்ற தம்பியை குத்தி கொலை செய்த அண்ணன்.. அதிர்ச்சியில் காவல்துறை.!!
in Maharastra brother murder
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை காந்திவிலி பகுதியை சார்ந்தவர் துர்கேஷ் (வயது 24). இவர் புனே நகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் கரோனா வைரஸ் பரவியதை அடுத்து, புனேயில் இருந்து மும்பைக்கு திரும்பியுள்ளார்.
இந்நிலையில், நேற்று முன்தினத்தின் போது துக்கேஷ் வீட்டினை விட்டு வெளியே சென்றுள்ளார். இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலாகியுள்ள நிலையில், வீட்டினை விட்டு வெளியே செல்வதற்கு துர்கேஷின் சகோதரர் ராஜேஷ் (வயது 28) மறுப்பு தெரிவித்துள்ளார்.
மேலும், ராஜேஷ் தனது சகோதரர் வெளியே செல்ல மறுப்பு தெரிவித்து எச்சரித்துள்ளார். இதனை கேட்டுக்கொள்ளாத துர்கேஷ் வெளியே செல்லவே, இரவு நேரத்தில் ஊரை சுற்றிவிட்டு வீட்டிற்கு திரும்பியுள்ளார்.
இவர் வீட்டிற்கு வந்ததும் அண்ணன் தம்பிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்படவே, ராஜேஷ் கூர்மையான ஆயுதத்தை அடுத்து சகோதரரை குத்தியுள்ளார். இதனால் படுகாயமடைந்த துர்கேஷ் பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து இது குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து துர்கேஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், ராஜேஷை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
in Maharastra brother murder