பொதுதேர்வெழுதிய மாணவர்களுக்கு பிட்டை பறக்கவிட்ட வாலிபர்கள்.. வைரலாகும் வீடியோ காட்சிகள்.!! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பள்ளியில் மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு முறைகேடு செய்ய உதவி செய்தது தொடர்பான வீடியோ காட்சிகள் பெரும் வைரலாகி வருகிறது. 

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், அங்குள்ள யவாத்மால் மாவட்டத்தின் மஹாகோன் நகரில் தேர்வு மையத்தில் மாணவர்கள் தேர்வெழுதிக்கொண்டு இருந்துள்ளனர். 

இந்த சமயத்தில், தேர்வு மையத்தின் சுற்றுச்சுவர் மீது ஏறிய இளைஞர்கள் மாணவர்களுக்கு முறைகேடு செய்வதற்கு உதவியாக, துண்டு சீட்டில் பதில்களை எழுதி தூக்கி வீசியுள்ளனர். 

இதனைக்கண்ட அப்பகுதி மக்கள் தங்களின் அலைபேசியில் வீடியோ பதிவு செய்துகொண்டே காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், உதவி செய்பவர்களை விரட்டியடித்துள்ளனர். இந்த விஷயம் தொடர்பான காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Maharashtra youngster help to public exam forgery


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->