கடந்துபோன கள்ளக்காதல்.. ஊர்விட்டு ஊருக்கு வெறியுடன் வந்து வசமாக சிக்கிய இளைஞன்.!!
in Maharashtra man arrest due to murder attempt illegal affair girl
இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பையில் இருக்கும் சமந்தா நகரில் காவல் துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்துள்ளனர். இந்த நேரத்தில், சந்தேகத்திற்கு இடமான வகையில் ஆசாமி ஒருவன் வந்துள்ளான்.
இவனைப்பார்த்த காவல் துறையினர் அழைத்து விசாரணை செய்கையில், இவனிடம் நாட்டு துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் இருந்துள்ளது. இதனையடுத்து துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை பறிமுதல் செய்த காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையில், சம்பந்தப்பட்ட நபரின் பெயர் பங்கஜ் ராய் (வயது 38) என்பதும், இவன் உணவத்தில் சமையல்காரராக பணியாற்றி வருவதும் தெரியவந்துள்ளது. இவனிற்கு சமூக வலைதளத்தின் மூலமாக மும்பையை சார்ந்த திருமணம் முடிந்த பெண்மணியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த பழக்கம் இவர்களுக்குள் நாளடைவில் கள்ளக்காதலாக மலர்ந்துள்ளது. இதனையடுத்து இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்த நிலையில், இவனது நடவடிக்கை பிடிக்காமல் நாளடைவில் பெண்மணி கள்ளத்தொடர்பை துண்டித்துள்ளார். இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் பெண்ணை கொலை செய்ய பங்கஜ் ராய் துப்பாக்கியுடன் மும்பைக்கு வருகை தந்தது தெரியவந்துள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
in Maharashtra man arrest due to murder attempt illegal affair girl