டேட்டிங் ஆப்பால் சூனியம் வைத்துக்கொண்ட பெண்மணி.. தெய்வமாக காட்சி தந்த காவல்துறை..!! பெண்களே கவனமாக இருங்கள்..!!
in Maharashtra girl sexual torture dating app friend
இந்தியாவின் மும்பை மாநிலத்தில் சார்ந்த 28 வயது பெண்மணி, கடந்த சில நாட்களுக்கு முன்னதாக டேட்டிங் செயலி மூலம் வடாலா பகுதியை சார்ந்த ராஜ் தோதியா (வயது 29) என்ற வாலிபரின் அறிமுகம் கிடைத்துள்ளது. இதனையடுத்து இவர்கள் இருவரும் அலைபேசி எண்ணை பரிமாறிக்கொண்டு பேசத்துவங்கியுள்ளனர்.
இந்நிலையில், சம்பவத்தன்று இரவு சுமார் 13.30 மணியளவில் இவர்கள் இருவரும் நேரில் சந்தித்து பேச முடிவு செய்து, அங்குள்ள செம்பூர் பகுதியில் உள்ள பாரில் சந்தித்து பேசியுள்ளனர். இதன்பின்னர் ராஜ் பாந்திரா பகுதியில் செயல்பட்டு வரும் மற்றொரு பப்பிற்கு பெண்ணை அழைத்து சென்று மது அருந்த வைத்துள்ளார். இதனைத்தொடர்ந்து ராஜின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
இதனை சுதாரித்துக்கொண்ட பெண்மணி அங்கிருந்து வெளியேற முயற்சித்த நிலையில், காரில் பெண்மணியை வலுக்கட்டாயமாக ஏற்றிவிடுவதாக கூறி இரண்டு பேரும் நள்ளிரவு சுமார் 1.30 மணியளவில் காரில் புறப்பட்டு சென்றுள்ளனர். மேலும், கார் புறப்பட்டு சென்று கொண்டு இருந்த சில நிமிடத்திற்கு உள்ளாகவே பெண்ணிடம் ராஜ் அத்துமீறியுள்ளான்.
இதனால் பயந்துபோன பெண்மணி கழிவறைக்கு செல்ல வேண்டும் என்று கூறி காரில் இருந்து இறங்கி தப்பி சென்றுள்ளார். பெண்மணி தப்பி செல்வதை கண்ட காமுகன் காரிலேயே துரத்தி சென்றுள்ளான். இந்த நேரத்தில் அதிஷ்டவசமாக கண்காணிப்பு பணியில் இருந்த காவல் துறையினர் வாகனம் வரவே, பெண் விஷயத்தை கூறி காப்பாற்ற சொல்லியுள்ளார்.
பெண் காவல் அதிகாரிகளிடம் பேசுவதை கண்ட ராஜ் சம்பவ இடத்தில் இருந்து தப்பியோடியுள்ளான். இதனையடுத்து காவல் துறையினர் பெண்ணை பாதுகாப்பாக காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று புகார் அளிக்க கூறியுள்ளனர். பின்னர் பெண் அளித்த புகாரின் பெயரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
in Maharashtra girl sexual torture dating app friend