கர்ப்பிணி பெண்ணின் வயிற்றல் பஞ்சை வைத்து தைத்த மருத்துவர்கள்..! ஐந்து நாள் துடிதுடித்து உயிரிழந்த பெண்மணி..!!
in Maharashtra girl died due to poor doctor pregnancy surgery
இந்தியாவின் மஹாராஷ்டிர மாநிலத்தை சார்ந்த பெண்மணி தனஸ்ரீ. இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையில்., பிரசவதற்க்காக அங்குள்ள அரசு மருத்துவமனையில் அனுமதியாகியுள்ளார். இந்த நிலையில்., அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் பணியில் யாரும் இல்லாமல் இருந்துள்ளனர்.
இது குறித்து பெண்ணின் உறவினர்கள் அங்குள்ள பணியாளர்களிடம் விசாரணை செய்ததை அடுத்து., மருத்துவர்கள் தனியாக கிளீனிக் நடத்தி வருவதால் அங்கு சென்றுவிட்டதாக கூறியுள்ளனர். இதனையடுத்து அந்த சமயத்தில் திடீரென பணிக்கு வந்த மருத்துவர் பரிசோதனை செய்துள்ளார்.
பரிசோதனை செய்த மருத்துவர் பெண்ணிற்கு நீர் சத்து குறைவாக இருப்பதன் காரணமாக உடனடியாக சிகிச்சை மேற்கொண்டு குழந்தையை வெளியெடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதனையடுத்து அறுவை சிகிச்சைக்கு பின்னர் ஆண் குழந்தையை பெற்றெடுத்த நிலையில்., பிரசவத்திற்கு பின்னர் சிகிச்சை பெற்றுவந்த நேரத்தில்., கடுமையான வயிற்று வலியானது ஏற்பட்டுள்ளது.
இதற்கு பின்னர் ஐந்து நாட்கள் கடுமையான வயிற்று வலியால் அலறித்துடித்த நிலையில்., பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனையடுத்து உறவினர்கள் போராட்டம் செய்ததை அடுத்து., உடலானது பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
பிரேத பரிசோதனையின் முடிவில் பெண்ணின் வயிற்றுக்குள் அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்திய பஞ்சு வயிற்றுக்குள் இருந்தது தெரியவந்துள்ளது. இந்த அதிர்ச்சி தகவலானது வெளிவந்துள்ள நிலையில்., குழந்தையின் எதிர்காலமும் கேள்விக்குறியாக்கியுள்ளது.
Tamil online news Today News in Tamil
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு
9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்..
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்
TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்...
English Summary
in Maharashtra girl died due to poor doctor pregnancy surgery