பச்சிளம் குழந்தையுடன் தூக்கில் பிணமாக தொங்கிய தம்பதி.. 13 உறவினர்களின் கொடூரத்தால் எடுக்கப்பட்ட விபரீத முடிவு.!!
in Maharashtra Couple suicide attempt with child due to relation torture
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தானே மாவட்டம் வாகலான் கிராமத்தை சார்ந்தவர் சிவராம் பாட்டில் (வயது 44). இவரது மனைவியின் பெயர் தீபிகா (வயது 42). இவர்கள் இருவருக்கும் அனுஷ்கா என்ற நான்கு வயதுடைய மகள் இருக்கிறார். சிவராம் வீட்டருகேயே இருக்கும் தொழிற்சாலையில் பணியாற்றி வந்துள்ளார்.
இந்த சமயத்தில், இன்று அதிகாலை நேரத்தில் சுமார் 1 மணியின் போது சிவராம், தீபிகா மற்றும் குழந்தை அனுஷ்கா வீட்டில் பிணமாக தொங்குவதாக காவல் துறையினருக்கு தகவல் தெரியவந்துள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் மூவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில், தம்பதிகள் இருவரும் அனுஷ்காவை கொலை செய்துவிட்டு தூக்கில் தொங்கியது தெரியவந்துள்ளது. இவர்கள் தற்கொலை முன்னதாக கடிதமொன்றை எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துள்ளனர். இது தொடர்பான கடிதத்தில் இவர்களின் தற்கொலைக்கான காரணம் காவல் துறையினருக்கு தெரியவந்துள்ளது.
இது குறித்த கடிதத்தில், இவர்களது குடும்பத்தினர் கொடுத்த தொல்லையின் காரணமாக தற்கொலை முடிவை எடுத்துக்கொண்டதாகவும், இந்த தற்கொலைக்கு காரணமாக குடும்பத்தினரை சார்ந்த 13 பேரின் பெயர்களையும் எழுதி வைத்துள்ளனர். கடிதத்தில் உள்ள நபர்களிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
in Maharashtra Couple suicide attempt with child due to relation torture