மகளிடம் அத்துமீறிய மதுவிலக்குதுறை அதிகாரியை., சாலையில் அடித்து நொறுக்கிய தாயார்..! வெளியான வீடியோ காட்சிகள்..!! - Seithipunal
Seithipunal


இந்த உலகத்தில் பெண்கள் பல விதமான பிரச்சனைகளுக்கு உள்ளாகி வருகின்றனர். பெண்களுக்கு எதிரான அநீதிகள் தொடர்ந்து நடைபெற்று., நம்மிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில்., மதுவிலக்கு துறை அதிகாரி பெண்ணிடம் அத்துமீறி நடந்துகொண்டது பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. 

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள மகேஸ்வரி நகர் பகுதியில் இருக்கும் இல்லத்தில்., சட்ட விரோதமாக மது விற்பனை நடைபெற்று வருவதாக மதுவிலக்கு துறையினருக்கு தகவல் வந்துள்ளது. 

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில்., அங்கிருந்த நபர்களுடன் அதிகாரிகளுக்கு வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதத்தால் ஆத்திரமடைந்த அதிகாரி., அங்கிருந்த பெண்ணை ஆபாசமாக சில்மிஷம் செய்துள்ளார். 

sexual harassment, sexual abuse, sexual torture, rapped,

இதனால் ஆத்திரமடைந்த பெண்ணின் தாயார்., அவரை அடித்து நொறுக்கியுள்ளார். மேலும்., இல்லத்தில் நடந்த இந்த பிரச்சனையை மக்கள் அறியும் வகையில்., அதிகாரியின் காலரை பிடித்து வெளியே இழுத்து வந்த பெண்., சாலையில் அதிகாரியை அடித்து நொறுக்கினார். 

இந்த விஷயத்தை கண்ட சக அதிகாரிகளும் எதுவும் செய்ய முடியாமல் திகைத்து நின்ற நிலையில்., இந்த காட்சிகளை அங்கிருந்த மக்கள் விடியோவாக பதிவு செய்து இணையத்தில் பரப்பியதை அடுத்து., ஏழு பேரின் மீது வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் கைது செய்துள்ளனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in madya predesh govt staff attacked by woman due to sexual torture


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->