தோழியை காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்ற கொடூரன் செய்த கொடுரமான செயல்..! விசாரணையில் பதறிப்போன காவல் துறையினர்..!!
in madya predesh girl try to rap and killed by her boy friend
இந்தியாவின் மத்திய பிரதேசம் மானியத்தில் உள்ள ஜபல்பூர் பகுதியை சார்ந்த மாணவியின் பெயர் ரோஸி (வயது 18., பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் அங்குள்ள பள்ளியில் 12 ஆம் வகுப்பில் பயின்று வருகிறார். இவர் தன்னுடைய தோழருடன்., கடந்த வியாழக்கிழமையன்று அங்கிருக்கும் பிஜாப்பூரி கிராமத்தின் காட்டுப்பகுதிக்கு சென்றிருந்தார்.
இதற்கு பின்னர் மாணவி வீட்டிற்கு வராததை அடுத்து., இவரை காணாது தேடி அலைந்த பெற்றோர் செய்வதறியாது திகைத்து., அங்குள்ள காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தனர். இவரின் புகாரை ஏற்ற காவல் துறையினர் மாணவியை பல இடங்களில் தேடி அலைந்தும்., மாணவி குறித்த தகவல் கிடைக்காமல் இருந்துள்ளனர்.
இந்த தருணத்தில்., பிஜாப்பூரி கிராம வனப்பகுதியில் பெண்ணின் சடலம் இருப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர்., பெண்ணின் உடலை அழுகிய நிலையில் கண்டெடுத்துள்ளனர். இதனையடுத்து மாணவியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து., வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொள்ள துவங்கினர்.
அந்த விசாரணையில்., மாணவி சம்பவத்தன்று தனது தோழன் சிங் சயான் என்பவனுடன் காட்டுப்பகுதிக்கு சென்றது தெரியவந்தது. இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணையில்., காட்டுப்பகுதிக்கு மாணவியை அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி செய்ததில்., மாணவி எதிர்த்ததால் அவரை கொலை செய்தது தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
in madya predesh girl try to rap and killed by her boy friend