அடுத்தடுத்து மாயமான மாணவிகள்.. தீவிரமாகும் காவல்துறை விசாரணை.. மதுரையில் பரபரப்பு.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் மதுரை மாவட்டத்தில் உள்ள மேலூரை அடுத்துள்ள சிட்டம்பட்டி பகுதியை சார்ந்தவர் முருகன். இவரது மகளின் பெயர் காத்தம்மாள் தேவி (வயது 19). இவர் அங்குள்ள அரசு கல்லூரியில் இரண்டாம் வருடம் பயின்று வருகிறார். 

இந்த நிலையில், சம்பவத்தன்று இவர் திடீரென மாயமாகவே, இவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதனையடுத்து இது தொடர்பாக அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இது தொடர்பான புகாரை ஏற்ற காவல் துறையினர், விசாரணை செய்து வருகின்றனர். 

இதனைப்போன்று, மதுரை அருகேயுள்ள கொடிக்குளம் பகுதியை சார்ந்தவர் லிங்கம். இவரது மகளின் பெயர் கமலி (வயது 21). இவர் ஆண்டிபட்டி பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் வருடம் பயின்று வருகிறார். 

இந்த நிலையில், இவர் சம்பவத்தன்று வீட்டில் இருந்த நிலையில், திடீரென மாயமாகியுள்ளார். இவரை காணாது தேடி அலைந்த பெற்றோர், அதிர்ச்சியடைந்து அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இரண்டு பெண்கள் அடுத்தடுத்து மாயமாகியுள்ளது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in madurai girl missing police investigation


கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?




Seithipunal
--> -->