8 வயது குழந்தையை நள்ளிரவு முழுவதும் பலாத்காரம் செய்து., சாக்கடையில் பிணமாக வீசிய காம கொடூரன்.! வெளியான பேரதிர்ச்சி தகவல்.!!
in madhiya pradesh child rapped and killed by culprit police investigation going on
இந்த உலகம் முழுவதும் பெண்களுக்கு எதிரான பல கொடூரங்கள் நடைபெற்று வருகிறது. தினமும் பல்வேறு விதமான அநீதிகளுக்கு மத்தியில் பெண்கள் தங்களின் வாழ்க்கையை நகர்த்தி வருகின்றனர். தினமும் பள்ளி மற்றும் கல்லூரி என்று பணிகளுக்கு செல்லும் பெண்கள் பல விதமான முறையில் அநீதிகளுக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.
மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள போபாலில் அமைத்துள்ள கமலா நகர் பகுதியை சார்ந்த 8 வயதுடைய சிறுமி., தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் கடந்த சனிக்கிழமையன்று வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக அங்குள்ள கடைக்கு சென்றுள்ளார். இந்த நிலையில்., சிறுமி நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு வராததால்., சந்தேகமடைந்த குடும்பத்தினர் சிறுமியை தேடி அலைந்தனர்.
சிறுமியை எங்கு தேடியும் காணாததால் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இவரின் புகாரை இரவு காவலர்கள் சரிவர ஏற்று உடனடியாக பணியை துவங்கவில்லை என்ற தகவல் தெரியவருகிறது. இதனையடுத்து அதே பகுதியை சார்ந்த கவன்சிலரிடம் விஷயத்தை தெரிவித்த நிலையில்., காவல் துறையினருக்கு அழுத்தமானது தரப்பட்டது.
இந்த நேரத்தில்., காணாமல் போன சிறுமி அதிகாலையில் அங்குள்ள கழிவுநீர் தொட்டியில் இருந்து பிணமாக மீட்கப்பட்டார். சிறுமியின் பிரேதத்தை கைப்பற்றிய காவல் துறையினர்., பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில்., இது குறித்து விசாரணையை மேற்கொள்ள துவங்கினர். இந்த நிலையில்., வெளியான பிரேத பரிசோதனை அறிக்கையில் இருந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரேத பரிசோதனையின் அறிக்கையில்., சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து., கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இது குறித்த விசாரணையில் காவல் துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும்., பணி நேரத்தில் மெத்தனமாக இருந்த காவல் அதிகாரியை பணியிடை நீக்கம் செய்து காவல் துறை உயர் அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
English Summary
in madhiya pradesh child rapped and killed by culprit police investigation going on