குடிபோதையில் மூன்று மாதமேயான பிஞ்சு குழந்தையை தரையில் அடித்து கொலை செய்த கொடூர தந்தை.!!
in kolkatha baby killed by her father when drink and fight with wife
கொல்கத்தாவில் உள்ள பகுதியில் வசித்து வருபவன் பெயர் ராஜு. இவனுக்கும் அதே பகுதியை சார்ந்த அப்சாரி என்ற பெண்ணிற்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்னதாக திருமணம் நடைபெற்று முடிந்தது. ராஜுவுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால்., தினமும் பணிக்கு சென்று விட்டு மது அருந்திவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளான்.
மது அருந்திவிட்டு வரும் பழக்கத்தை வைத்து கொண்டு பின்னர் மனைவியுடன் சண்டையிட்டு வந்துள்ளான். இந்த நிலையில்., இவர்கள் இருவருக்கும் குடும்ப தகராறு ஏற்பட்டு வந்த நிலையில்., நேற்றும் வழக்கம் போல குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறு இவர்களுக்கு வாக்குவாதமாக முற்றியுள்ளது.
இதனையடுத்து வீட்டிற்குள் சென்று பாத்திரங்களை அடித்து நொறுக்கிய ராஜு., தொட்டிலில் உறங்கிக்கொண்டு இருந்த மூன்று மாத பிஞ்சு குழந்தையை கால்களை பிடித்து தலைகீழாக தூக்கி தரையில் அடித்து வீசியுள்ளான்.
குழந்தையின் கால்களை பிடித்து தூக்குவதை கண்டுகொண்ட அப்சாரி சுதாரிப்பதற்குள் குழந்தையின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு துடிதுடித்து இறந்தது. குழந்தையை உடனடியாக அங்குள்ள மருத்துவமனைக்கு அலறியபடியே கொண்டு சென்ற நிலையில்., குழந்தை இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனை கேட்டு கடும் மன வேதனைக்கு உள்ளான அப்சாரி கதறியளவே., இது குறித்த தகவல் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து., விசாரணை மேற்கொண்டு ராஜுவின் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணையை துவக்கினர்.
அந்த விசாரணையில்., ராஜுவை கைது செய்த நிலையில்., பெண் குழந்தை பிறந்தது ராஜுவுக்கு பிடிக்காததால் தினமும் சண்டையிட்டு வந்த நிலையில்., ஆத்திரத்தில் குழந்தையை கொலை செய்ததாக தெரிவித்துள்ளான். இதனையடுத்து ராஜூவை காவல் துறையினர் சிறையிலடைத்தனர்.
English Summary
in kolkatha baby killed by her father when drink and fight with wife