நட்பாக பழகிய பெண்.! நண்பனின் கொடூர எண்ணத்தால் உடல் சிதறி பலியான சோகம்., வெளியான அதிர்ச்சி சம்பவத்தின் பகீர் தகவல்.!!
in kerala woman killed her boy friend when not accepted illegal affair using jelatine sticks
கேரள மாநிலத்தில் உள்ள வயநாடு மாவட்டத்தில் உள்ளது சுல்தான்பெத்தேரி. இந்த ஊருக்கு அருகில் உள்ள நாய்கட்டி கிராமப்பகுதியை சார்ந்தவர் பென்னி. இவர் அங்குள்ள பகுதியில் மரத்தினால் ஆன பொருட்களை செய்யும் கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார்.
இந்த சமயத்தில் அதே பகுதியை சார்ந்த ராஜிதா பேகம் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண்ணிடம் நட்பாக பழகி வந்துள்ளார். ராஜிதா பேகத்திற்கு திருமணம் மருந்து மூன்று பெண் குழந்தைகள் உள்ள நிலையில்., இருவரும் நட்பு வட்டாரத்தில் பழகி வந்துள்ளனர்.
இந்த நிலையில்., இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனையை அடுத்து., கணவர் இது குறித்து ராஜிதா பேகத்தை அறிவுறுத்தி பென்னியுடன் பழகுவதை தவிர்க்க கூறியுள்ளார். இதனை ஏற்ற ராஜிதா பேகம் அவருடன் பேசுவதை தவித்து வந்துள்ளார்.
இதனை காரணமாக வைத்து ராஜிதா பேகத்தை கொலை செய்ய முடிவு செய்து., இன்று காலை அவரது இல்லத்திற்கு சென்று ஜெலட்டின் குச்சிகளை உடலில் வைத்து கொண்டு வெடிக்க செய்துள்ளார். இந்த விபத்தில் ராஜிதா பேகம் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பென்னியும் உடல் சிதறி உயிரிழந்துள்ளார்.
இந்த வெடி சத்தத்தை உணர்ந்த மக்கள் பதறியபடி வீட்டிற்குள் சென்று பார்த்த சமயத்தில் இருவரும் உடல் சிதறிய நிலையில்., உயிரிழந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் இருவரின் பிரேதத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும்., இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில் இந்த தகவலானது வெளிவந்துள்ளது. இந்த சம்பவமானது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
in kerala woman killed her boy friend when not accepted illegal affair using jelatine sticks