கேரளாவில் வடகிழக்கு பருவமழை துவங்கும் தேதி மாற்றம்.! வெளியான தகவல்.!!
in kerala north east monsoon starts after twice weeks
இந்தியாவின் கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழையானது வருடம்தோறும் ஜூன் மாதத்தின் 1 ஆம் தேதியன்று துவங்கும். இந்த வருடத்தில் துவங்கிய தென்மேற்கு பருவமழையானது ஒரு வாரம் தாமதமாக துவங்கியது.
கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதத்தில் பெய்த தென்மேற்கு பருவமழை., போதுமான அளவிற்கு மழையை கேரளாவில் பெய்யாத நிலையில்., இதற்கு பின்னர் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் அதிகளவு மழையானது பெய்து வந்தது.
இதனால் கேரள மாநிலத்தில் உள்ள பல பகுதியில் வெள்ளம் சூழ்ந்த நிலையில்., பெரும் சேதமானது ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் மழை வெள்ளத்தில் சிக்கி மக்கள் பலரும் பரிதாபமாக உயிரிழந்த நிலையில்., நேற்றோடு தென்மேற்கு பருவமழையும் முடிந்தது.
இந்த நிலையில்., தென்மேற்கு பருவமழை முடிந்த மறுநாளிலேயே வடகிழக்கு பருவமழை கேரளாவில் துவங்கும் நிலையில்., நேற்று தென்மேற்கு பருவமழை கேரள மாநிலத்தில் துவங்கியிருக்க வேண்டும்.
இந்த மாற்றம் இல்லாமல்., இதற்கு மாறாக கேரளாவில் வடகிழக்கு பருவமழை துவங்கவில்லை. மேலும்., இப்போதுள்ள நிலவரத்தை படி இம்மாதத்தின் இரண்டாம் வாரம் வடகிழக்கு பருவமழை துவங்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
in kerala north east monsoon starts after twice weeks