திருமணம் முடிந்த பெண்களை குறிவைத்து சதம் அடிக்க ஆசைப்பட்ட காம கொடூரன்.! 68-ல் கிளீன் போல்டு ஆன சம்பவம்.!!
in kerala married girl trapped and rapped by a culprit police investigation update
கேரள மாநிலத்தில் உள்ள கோட்டயம் பகுதியை சார்ந்த திருமணம் முடித்த இளம்பெண் ஒருவர்., கடந்த சில தினங்களுக்கு முன்னதாக அங்குள்ள கோட்டயம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த புகாரில்., எனது புகைப்படத்தை மார்பிங் செய்து., எனது கணவருக்கு அனுப்பிவிடுவதாக மிரட்டி., என்னை பல முறை கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்து வந்த காம கொடூரனின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் கூறியிருந்தார்.
இதனை ஏற்ற காவல் துறையினர்., இது குறித்து வழக்குப்பதிவு செய்து மேற்கொண்ட விசாரணையை அடுத்து., கோட்டயம் அரிம்பரப்பு பகுதியை சார்ந்த காம கொடூரன் பிரதீஷ் குமார் (வயது 25) என்பவனை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில்., தனக்கு தேவையான பெண்ணை முதலில் தேர்ந்தெடுத்து குறிவைத்து., அவர்களை பின்தொடர்ந்து நட்புரை ஏற்படுத்தி., அவர்களிடம் பேசி அவர்களின் அலைபேசி எண்ணையும் பெற்றுள்ளான்.
இதற்கு பின்னர் அவர்களிடம் பேசி அவர்களின் குடும்ப பிரச்சனைகள் அனைத்தையும் தெரிந்து கொண்டு., அனுதாபடுவது போல நாடகமாடி ஏமாற்றி வந்துள்ளான். இந்த சமயத்தில்., அந்த பெண்களின் கணவரின் முகநூலை அறிந்து கொண்டு., போலி பெண் கணக்கில் அவர்களுடன் பேசி ஆபாச சாட்டிங் செய்து., அந்த புகைப்படத்தை ஆதாரமாக அந்த பெண்களிடம் காட்டி., கணவருக்கு கள்ளத்தொடர்பு இருப்பது போல நம்பவைத்துள்ளான்.
இதனை நம்பிய பெண்களுக்கு ஆதரவு அளிப்பது போல நடித்து., அவர்களுடன் வீடியோ சாட்டிங் செய்து அதனை பதிவு செய்து., அவர்களின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து., அவர்களுக்கு அனுப்பி தான் யார் என்ற உண்மையையும்., நீ எனது ஆசைக்கு இணங்காவிடில் உனது கணவருக்கு இந்த புகைப்படத்தை அனுப்பிவிடுவேன் என்றும் மிரட்டியுள்ளான்.
இதனால் அதிர்ச்சியில் இருக்கும் பெண்களை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்து வந்த நிலையில்., கடந்த இரண்டு வருடங்களில் மட்டும் சுமார் 50 க்கும் மேற்பட்ட பெண்களை சீரழித்த நிலையில்., இந்த பெண்ணை சீரழிக்கும் சமயத்தில் அவர் கதறியளவே., நீ எனக்கு 68 ஆவது நபர்., இன்னும் இரண்டு வருடத்தில் 100 பெண்களை சீரழிப்பேன் என்று கூறியுள்ளான். இதனையடுத்து அவனது மடிக்கணினியை கைப்பற்றிய காவல் துறையினர்., இது குறித்த விசாரணையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
English Summary
in kerala married girl trapped and rapped by a culprit police investigation update