காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த காதலியின் தந்தையை நண்பர்களுடன் சேர்ந்து கொலை பெண்ணின் காதலன்..! கேரளாவில் பயங்கரம்..!! - Seithipunal
Seithipunal


கேரள மாநிலத்தில் உள்ள பத்தினம்திட்டா அருகேயுள்ள இலவம்திட்டா பகுதியை சார்ந்தவர் சஜீவ் (வயது 55). இவருக்கு திருமணம் முடிந்து மனைவி மற்றும் ஒரு மகள் உள்ளனர். சஜீவ் வெளிநாட்டில் பணியாற்றி வந்த நிலையில்., சஜீவிற்கு ஒரே மகள் என்பதால் அதிகளவு பாசத்தை கொடுத்து மகளை வளர்த்துள்ளார். மேலும்., மகள் என்ன கேட்டாலும் வாங்கி பாசத்துடன் கொடுத்துள்ளார். 

இந்த நிலையில்., சஜிவின் மகள் கல்லூரிக்கு சென்று வரும் சமயத்தில்., தனியார் பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வந்த நபருடன் காதல் ஏற்பட்டதை அடுத்து., இருவரும் உயிருக்கு உயிராக காதலித்து வந்துள்ளார். இந்த காதல் விவகாரம் பெண்ணின் தாயாருக்கு தெரியவந்த நிலையில்., இது குறித்து மகளை எச்சரித்துள்ளார். இதனை அவர் ஏற்காததால்., வெளிநாட்டில் பணியாற்றி வந்த சஜீவிற்கு தகவல் தெரிவித்துள்ளார். 

marriage, indian marriage, south indian marriage, திருமணம்,

இதனை அறிந்த சஜீவ் வெளிநாட்டில் இருந்து ஊருக்கு மீண்டும் திரும்பி., தனது மகளை எச்சரித்துள்ளார். இதனையும் பெண் ஏற்க மறுத்து., காதலருடன் நகைகளை எடுத்து கொண்டு ஓட்டம் பிடித்துள்ளார். இதனையடுத்து இது குறித்து சஜீவ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இவரின் புகாரை ஏற்ற காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு., காதல் ஜோடியை பேச்சு வார்த்தைக்கு அழைத்துள்ளனர்.

காவல் நிலையத்திற்கு வந்த காதல் ஜோடியிடம் நடத்தப்பட்ட பேச்சு வார்த்தையில் காதல் ஜோடி பிரிய மறுத்துள்ளனர். தந்தை மகளின் மீது வைத்திருந்த பாச போராட்டம் அனைத்தும் நாடக காதலின் முன்னர் பொய்த்துப்போக., காதலனின் பேச்சுப்படி பெண்ணும் பேச., பெண்ணின் விருப்பத்தை மேற்கோள்காட்டி காவல் துறையினர் காதல் ஜோடியை அனுப்பி வைத்துள்ளனர். 

died, killed, murder, suicide attempt, கொலை, இறப்பு,

தனது மகளை தன்னிடம் இருந்து பிரித்த காரணத்தால் ஆத்திரத்தில் தந்தை அவ்வப்போது மகளின் கணவனை சந்தித்து அழுது புலம்பி தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த காதலன் மற்றும் அவனது நண்பர்கள் மூவர் சேர்ந்து., சஜிவின் இல்லத்திற்கு சென்று கொலை செய்துள்ளனர். சஜிவை கொலை செய்த பின்னர் சம்பவ இடத்தில் இருந்து தப்பியோடியுள்ளனர். 

சஜிவின் அலறல் சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர்., உயிருக்கு போராடிய சஜிவை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர் வழியிலேயே பரிதாபமாக உயிரிழக்க., இது குறித்த தகவல் காவல் துறையினருக்கு தெரிவிக்கப்பட்டது. இதனை அறிந்த காவல் துறையினர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு., கொலையாளியான நால்வரை தேடி வருகின்றனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in kerala man murder due to love problem


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->