பெண் காவல் அதிகாரியை ஓடவிட்டு எரித்து கொலை செய்த கொடூரன்.! கேரளாவில் நடந்த சம்பவத்தில் வெளியாகும் பரபரப்பு தகவல்.!!  - Seithipunal
Seithipunal


இந்த உலகம் முழுவதும் பெண்களுக்கு எதிரான பல அநீதிகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டு வருகிறது. அவ்வாறு நடைபெறும் அநீதிகள் அவர்களுக்கு தெரிந்த நபர்களால் பெரும்பாலும் வழங்கப்படுவது பெரும் சர்ச்சையையும்., அதிர்ச்சியையும் நம்மிடைய ஏற்படுத்தியிருக்கிறது. 

கேரள மாநிலத்தில் உள்ள மாலிவெக்கறா மாவட்டத்தில் இருக்கும் வலிகுன்னம் காவல் நிலையத்தில் பெண் காவலராக பணியாற்றி வரும் அதிகாரி., நேற்று மதியம் ஒரு மணியின் போது வீட்டிற்கு செல்ல தயாராகி., தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்தார். 

அந்த சமயத்தில்., பெண் காவல் அதிகாரியை பின் தொடர்ந்து வந்த காரில் இருந்த நபர்., திடீரென காவல் அதிகாரியை இடைமறித்து., தான் கொண்டு வந்த பெட்ரோலை ஊற்றி தீவைத்து கொளுத்தியதில்., உடல் கருகி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். 

இந்த சம்பவத்தில் உயிரிழந்த காவல் அதிகாரிக்கு கணவர் வெளிநாட்டில் பணியாற்றி வரும் நிலையில்., மூன்று குழந்தைகள் உள்ளனர். காவல் அதிகாரியை தீயிட்டு கொடூரன் தீக்காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான். 

அந்த வகையில்., பெண் காவல் அதிகாரியை எரித்து கொலை செய்ததும் அவருடன் பணியாற்றிய அஜாஸ் (வயது 33) என்பதும் என்பதும் தெரியவந்தது. இது தொடர்பான விசாரணையில் காவல் துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in kerala lady police killed case investigation


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->