கள்ளக்காதல் விஷயம் உறவினர்களுக்கு தெரிய, 5 நாள் கன்னியாகுமரியில் ரூம் போட்டு, ஆறாவது நாள் அரங்கேறிய சோகம்.!!
in Kerala illegal affair couple suicide attempt male died in kanniyakumari lodge
இந்தியாவின் கேரள மாநிலத்தில் உள்ள கொல்லம் தட்டாரக்கோணம் பகுதியை சார்ந்தவர் போஸ் (வயது 38). இவர் காஜனூரில் காவல் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணம் முடிந்து மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர்.
இந்த சமயத்தில், கசனூர் பகுதியில் வசித்து வரும் சுப்ரியா (வயது 34) என்கிற திருமணம் முடிந்த பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவருக்குள்ளும் ஏற்பட்ட பழக்கமானது நாளடைவில் கள்ளக்காதலாக மாறவே, இருவரும் அவ்வப்போது தனிமையில் சந்தித்து வந்துள்ளனர்.
தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருவரும் இருந்து வந்த நிலையில், இவர்களின் கள்ளக்காதல் உறவானது இரண்டு இல்லாதாருக்கும் தெரியவரவே, கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கள்ளக்காதல் ஜோடி இருவரும் சேர்ந்து கடந்த 6 ஆம் தேதி வீட்டில் இருந்து வெளியேறி கன்னியாகுமரிக்கு வருகை தந்து, கணவன் - மனைவி போல அறையெடுத்து தங்கியுள்ளனர்.
இந்த நிலையில், இன்று காலை நேரத்தில் திடீரென இவர்களின் அறையில் இருந்து அலறல் சத்தம் கேட்கவே, சந்தேகத்தின் பேரில் விடுதி ஊழியர்கள் கதவை திறந்து உள்ளே சென்றுள்ளனர். இதில் சுப்ரியா விஷம் அருந்தி உயிருக்கு போராடிக்கொண்டு இருந்துள்ளார். காவல் துறை அதிகாரியான போஸ் அங்குள்ள வாவத்துறை கடற்கரை பகுதியில் பிணமாக இருந்துள்ளார்.
போஸும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்ததை அடுத்து, இது தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சம்பவம் இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், உயிருக்கு போராடிய சுப்ரியாவை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதன்பின்னர் மேற்கொண்ட விசாரணையில், கள்ளகாதல் விவகாரத்தால் வீட்டினை விட்டு வெளியேறியதும், பின்னர் இருவரும் சேர்ந்தே தற்கொலை முடிவு எடுத்துக்கொண்டதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து போஸின் தற்கொலை விஷயம் உறவினர்களுக்கு தெரியப்படுத்தப்பட்டது. சுப்ரியா தொடர்பான தகவலும் அவரது உறவினர்களுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
in Kerala illegal affair couple suicide attempt male died in kanniyakumari lodge