கணவனுடன் சாலையில் சென்ற பெண்ணிற்கு பாலியல் தொல்லை வழங்கிய காம கொடூரன்.! உடந்தையாக இருந்த விடுதி உரிமையாளன்.!!
in kerala girl sexual torture by kerala congress leader police arrest culprit
இந்தியாவின் கேரள மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரம் அம்பலவயல் பகுதியில்., தமிழ்நாடு கோயம்புத்தூர் மாவட்டத்தை சார்ந்த பெண்மணி தனது கணவருடன் விடுதியில் அறையெடுத்து தங்கியிருந்தார். இந்த நிலையில்., சம்பவத்தன்று பெண் தனது கணவருடன் அங்குள்ள சாலையில் நடந்து சென்று கொண்டு இருந்த சமயத்தில்., அதே பகுதியை சார்ந்த காங்கிரஸ் தலைவரான சஜீவானந்தன் (வயது 39) என்பவன் வந்துள்ளான்.
இந்த நேரத்தில்., இருவரையும் கண்ட அவன் ஆத்திரமடைந்து சாலையில் வைத்து இருவரையும் தாக்கி அடித்து துன்புறுத்தியுள்ளான். இதுமட்டுமல்லாது இந்த காட்சியை கண்ட அங்குள்ள மக்கள் விடியோவாக பதிவு செய்து., இணையத்தில் பதிவு செய்ததை அடுத்து., இந்த விஷயம் வெளியாகி பெரும் பிரச்சனையானது.
இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர்., தம்பதிகளை நேரில் சந்தித்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில்., தம்பதிகள் விடுதியில் இருந்த சமயத்தில்., காம கொடூரன் சஜீவானந்தன்., பெண்ணிற்கு பாலியல் தொல்லை வழங்கியுள்ளான். இதுமட்டுமல்லாது விடுதியின் உரிமையாளரான விஜயகுமார் என்பவனும் பெண்ணிற்க்கு பாலியல் தொல்லை வழங்கியுள்ளான்.
இதனையடுத்து இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விஜயகுமாரை கைது செய்துள்ளனர். இந்த தகவலை அறிந்த சஜீவானந்தன் தலைமறைவாகவே., அவனை காவல் துறையினர் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில்., சஜீவானந்தன் கர்நாடக மாநிலத்தில் உள்ள புத்தூர் பகுதியில் இருக்கும் தோட்டத்தில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
இதனையறிந்த காவல் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து காம கொடூரன் சஜீவானந்தனை கைது செய்தனர். இதனையடுத்து அவனை அம்பல வயல் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும்., முன்ஜாமீன் கேட்டு காம கொடூரன் சஜீவானந்தன் கேரள நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளான்.
Tamil online news Today News in Tamil
English Summary
in kerala girl sexual torture by kerala congress leader police arrest culprit