"மன்னித்துக்கொள் அம்மா" கண்ணீருடன் விடை பெற்ற., பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சிறுமி.!! - Seithipunal
Seithipunal


இந்த உலகம் முழுவதும் பெண்களுக்கு எதிரான கொடூரங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது போன்ற குற்றங்களை குறைக்க., நமது சட்டங்கள் அதிரடியாக கடுமையாக மாறும் பட்சத்தில்., பெண்களுக்கு எதிரான அநீதிகளில் இருந்து பாதுகாக்க இயலும் என்பதே மக்களின் விருப்பமாக உள்ளது. கேரள மாநிலத்தில் உள்ள மலப்புரம் அருகேயுள்ள கிராமத்தில் வசித்து வரும் 12 வயதுடைய சிறுமி., அதே பகுதியில் இருக்கும் பள்ளியில் பயின்று வருகிறார். 

இந்த நிலையில்., சிறுமியை அதே பகுதியை சார்ந்தவர்கள்., பாலியல் வன்கொடுமை செய்து வருவதாக., பள்ளி நிர்வாகத்தினருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இதனை அறிந்த பள்ளி நிர்வாகத்தினர்., குழந்தைகள் நல அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்ததை அடுத்து., சம்பவ இடத்திற்கு விரைந்த குழந்தைகள் நல அதிகாரிகள் சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டனர். 

sexual harassment, sexual abuse, sexual torture, rapped, பாலியல் வன்கொடுமை,

அந்த விசாரணையில்., சிறுமியை பலர் பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இதனை கேட்டு அதிச்சியடைந்த குழந்தைகள் நல அதிகாரிகள் மற்றும் பள்ளி நிர்வாத்தினர்., இது குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர்., இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அந்த விசாரணையில்., சிறுமியை அவரது கிராமத்தினர் பலரும் பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. தனக்கு நடந்த துயரங்கள் குறித்து சிறுமி அதிகாரிகளிடம் தெரிவித்து கதறியழுதுள்ளார். மேலும்., சிறுமியை கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக பாலியல் வன்கொடுமை செய்ததும் தெரியவந்துள்ளது. 

இதுமட்டுமல்லாது சிறுமியை தற்போது வரை சுமார் 30 க்கும் மேற்பட்டோர் பாலியல் வன்கொடுமை செய்ததும்., இந்த விசயத்திற்கு சிறுமியின் பெற்றோர் இருவரும் உடந்தையாக இருந்ததும் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில்., தற்போது விசாரணை அறிக்கை வந்துள்ளது. 

sexual harassment, sexual abuse, sexual torture, rapped, பாலியல் வன்கொடுமை,

சிறுமியை முதலில் தந்தையின் நண்பர் பாலியல் வன்கொடுமை செய்ததும்., பாலியல் வன்கொடுமை செய்த பின்னர் தனது தந்தையிடம் பணம் கொடுத்தனர் என்றும் சிறுமி தெரிவித்துள்ளார். மேலும்., கடந்த இரண்டு வருடங்களில் சுமார் 30 க்கும் மேற்பட்டவர்கள் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததும்., தனது தந்தை வேலைக்கு செல்லாமல் இருந்த நிலையில்., சொந்த மகளை வைத்து விபச்சாரம் செய்து வந்துள்ளார். 

மகளை வைத்து விபச்சாரம் செய்வதில்., மூவருக்கு பங்கு உள்ளது என்றும்., நமது குடும்பம் வறுமையில் வாடி வருவதாலும்., வீட்டின் வாடகைக்காகவும்., தனது பாட்டியின் மருத்துவ செலவரிக்காகவும் அவர்களுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் பெற்றோர்கள் வற்புறுத்தியதும்., தன்னை காம கொடூரன் எதற்காக நெருங்குகிறான் என்ற நிலையை கூட உணராமல் இருந்துள்ளார். 

இந்த செய்தியை சிறுமி விசாரணையில் கூறியதை கேட்டு பெரும் அதிர்ச்சிக்கு உள்ளான அதிகாரிகள்., சிறுமியை அரசு பாதுகாப்பு இல்லத்திற்கு அழைத்து செல்ல முடிவு செய்துள்ளனர். இதனையடுத்து சிறுமியின் இல்லத்திற்கு கடைசியாக சென்று வர விரும்பிய சிறுமி., தனது இல்லத்தின் கதவில் மன்னித்துக்கொள்ளுங்கள் அம்மா (Sorry Amma) என்று கண்ணீருடன் எழுதிவிட்டு வந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விஷயத்தில்., சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டு., விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறார் என்பதும் குறிபிடத்தக்கது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in kerala girl sexual harassment case girl says mother sorry and go hostel


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->