ஆசிரியையின் தலைமுடியை அறுத்து, பாலியல் பலாத்காரம் சித்ரவதை செய்து கொடூர கொலை?... கேரளாவில் பயங்கரம்.!!
in kerala girl sexual harassment and murder police investigation
இந்தியாவின் கேரள மாநிலத்திலுள்ள பத்தனம் திட்டா பகுதியைச் சேர்ந்தவர் சந்திரசேகரன். இவர் அங்குள்ள வங்கியில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவியின் பெயர் ரூபஸ்ரீ (வயது 44).
இவர் அரசு பள்ளி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர்கள் இருவருக்கும் ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். ரூபஸ்ரீ தினமும் பள்ளிக்கு தனது இருசக்கர வாகனத்தில் செல்வது வழக்கம்.
இந்த நிலையில், கடந்த 16ம் தேதி பள்ளி முடிந்ததும் தனது குழந்தை படிக்கும் பள்ளிக்கு சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்து உறவினர் இல்லத் திருமண விழாவிற்கு சென்று பங்கேற்றுள்ளார்.
இதற்குப் பிறகு ஆசிரியை ரூபஸ்ரீ வீடு திரும்பவில்லை. இதனையடுத்து அவரை பல இடங்களில் தேடியும் காணவில்லை. இதனையடுத்து இது தொடர்பாக காவல் துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டது.
இது குறித்த புகாரை ஏற்ற காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், இன்று அங்குள்ள மஞ்சேஸ்வரம் கடற்கரைப் பகுதியில் பிணமாக கிடந்துள்ளார்.
இவரது தலைமுடி அறுக்கப்பட்டு, உடல் இன்னும் பல காயங்கள் இருந்துள்ளது. இதனை தொடர்ந்து தகவலறிந்த காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து மேற்கொண்ட சோதனையில், இவரது உடலில் காயங்கள் இருப்பதும், இவரை சித்தரவதை செய்து கொலை செய்துள்ளனர் என்பதையும் உறுதிப்படுத்தினர்.
இவரை யாரேனும் கடத்தி சித்திரவதை செய்து கொலை செய்திருக்கலாம் என்றும், இவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டாரா? எதற்காக தலைமுடியை அறுத்து கொலை செய்தனர்? என்பது தொடர்பான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் மாயமான போது ரூபஸ்ரீ இரண்டு அலைபேசிகளை வைத்திருந்த நிலையில், அதில் ஒரு அலைபேசியில் சுவிட்ச் ஆப் ஆகி இருந்தது. மற்றொரு அலைபேசிக்கு அழைப்பு வந்து கொண்டே இருந்தது. இதன் மூலமாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவரது இரு சக்கர வாகனமும் அங்குள்ள கடற்கரைப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
in kerala girl sexual harassment and murder police investigation