மாட்டு சாண வறட்டியில் இருந்த 5 பவுன் தங்க நகை.! கதவை தட்டி கங்கம் ஸ்டைல் டான்ஸ் ஆடிய கஜலட்சுமி.!!
in kerala cow eat 5 savaran gold chain when eating gross
கேரள மாநிலத்தில் உள்ள கொல்லம் மாவட்டத்தில் அமைந்துள்ள சதயமங்கலத்தில் வசித்து வரும் தம்பதியினர் சுஜா மற்றும் உல்-முல்க். இவர்கள் இருவரும் ஆசிரியர்கள் ஆவார்கள். இவர்களுக்கு ஷாஹினா என்ற பெண் குழந்தை உள்ளார். இவர்களின் இல்லத்தில் வறட்டிகளை பயன்படுத்துவதற்காக., கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னதாக அருகில் உள்ள கிராமத்தில் இருந்து வறட்டிகளை வாங்கி வந்துள்ளனர்.
இதனை சிறிது சிறிதாக உபயோகம் செய்து வந்த நிலையில்., கடந்த சில நாட்களுக்கு முன்னதாக வறட்டியை எரிப்பதற்கு இரண்டாக உடைத்த சமயத்தில்., அதில் சுமார் ஐந்து பவுன் அளவுள்ள நகையானது இருந்துள்ளது. மேலும்., அந்த நகையில் இலியாஸ் என்ற பெயரும் எழுதப்பட்டு இருந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்., நகையை உரியவரிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளனர்.
இதற்கான முயற்ச்சியில் ஈடுபட்ட குடும்பத்தினர் இது குறித்து சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து பதிவு செய்து வந்த நிலையில்., அங்குள்ள துடையனூர் தெக்கு கிராமத்தில் இலியாசு என்ற பெண்மணி வசித்து வரும் நிலையில்., இந்த நகை அவருடையது என்பது தெரியவந்துள்ளது. இது குறித்து இலியாஸிடம் கேட்ட சமயத்தில் அவர் தெரிவித்தது பெரும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது.
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னதாக இலியாஸின் தங்க நகை காணாமல் போன நிலையில்., வயிலில் விழுந்த தங்க நகைகளை பசு மேய்ந்த சமயத்தில் சாப்பிட்டு இருக்கும்., பின்னர் அது வறட்டி எடுத்து விற்பனை செய்து வந்த நிலையில்., வறட்டியுடன் தங்க நகையும் இருந்திருக்கலாம் என்று தெரிவித்தார். இதனையடுத்து காவல் துறையினரின் முன்னிலையில் நகைகளை கொடுப்பதற்கு சுஜாவின் குடும்பத்தினர் தயாராகி வருகின்றனர்.
English Summary
in kerala cow eat 5 savaran gold chain when eating gross