கண்ணைமறைத்த கள்ளக்காதல்.. குழந்தையை கடலில் வீசி மனைவி அரங்கேற்றிய கபடநாடகம்.. அதிர்ந்துபோன காவல்துறை..!!
in kerala child killed by mother due to illegal affair
இந்தியாவின் கேரள மாநிலத்தில் உள்ள கண்ணூர் அருகேயுள்ள கொடுவல்லி பகுதியை சார்ந்தவர் பிரணவ். இவரது மனைவியின் பெயர் சரண்யா (வயது 22). இவர்கள் இருவருக்கும் காதலித்து வந்த நிலையில், கடந்த 3 வருடங்களுக்கு முன்னதாக திருமணம் செய்து கொண்டுள்ளனர். இந்நிலயில், இவர்களுக்கு இரண்டு வயதுடைய வியான் என்ற குழந்தை உள்ளது.
இவர்கள் இருவரின் வாழ்க்கை நல்லபடியாக சென்று கொண்டு இருந்த நிலையில், கணவன் மனைவியிடையே திடீரென கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து கணவரிடம் கோபித்துக்கொண்டு சரண்யா தனது குழந்தையுடன், தாயாரின் இல்லத்திற்கு சென்றுள்ளார். பின்னர், சுமார் இரண்டு நாட்களுக்கு முன்னதாக பிரணவ்க்கு தொடர்பு கொண்ட சரண்யா சமாதானம் பேசியுள்ளார்.
தான் உங்களுடன் வாழ வேண்டும் என்றும், தன்னை மீண்டும் வந்து அழைத்து செல்ல வேண்டும் என்று கூறியுள்ளார். இதனையடுத்து மனைவியை அழைக்க மாமியாரின் இல்லத்திற்கு பிரணவ் செல்லவே, இரவு நேரம் என்பதால் தங்கியிருந்துவிட்டு காலை செல்லலாம் என்று சரண்யா கூறியுள்ளார். இதனையடுத்து காலையிலேயே செல்லம் என்று கூறி ப்ரணவும் தங்கிருந்துள்ளார்.
இந்நிலையில், மறுநாள் காலை நேரத்தில் குழந்தை வியான் மாயமாகவே, குழந்தையை காணவில்லை என்று கூறி சரண்யா கதறியழுதுள்ளார். மேலும், தன் மீதுள்ள கோபத்தின் காரணமாக குழந்தையை கணவர் கடத்திவிட்டார் என்றும் புகார் சுமத்தியுள்ளார். இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்போவதாகவும் கூறி, காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இது தொடர்பான வழக்குப்பதிவை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து பிராணாவிடம் விசாரணை மேற்கொள்ளவே, தான் குழந்தையை கடத்தவில்லை என்று கூறி விளக்கம் கொடுத்துள்ளார். இந்த நேரத்தில், சரண்யாவின் செயல்பாடுகள் முரண்பாடாக இருந்ததால், சந்தேகத்தில் காவல் துறையினர் சரண்யாவிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த விசாரணையில் உண்மை இறுதியாக வெளிவந்துள்ளது.
இது தொடர்பான விசாரணையில் சரண்யாவிற்கும் - இப்பகுதியை சார்ந்த திருமணம் முடியாத வாலிபருக்கும் இடையே கடந்த 6 மாதங்களுக்கு முன்னதாக பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கமானது இவர்களை அலைபேசியில் பேச வைத்து, பின்னாளில் கள்ளக்காதலாக மலரவைத்துள்ளது. இவர்களின் கள்ளக்காதல் வாழ்க்கையை உண்மையாக வாழ எண்ணி திட்டமிட்டுள்ளனர்.
இவர்களின் வாழ்க்கைக்கு குழந்தை இடையூறாக இருக்கும் என்று எண்ணி குழந்தையை தீர்த்துக்கட்டிவிட்டு, கொலைப்பழியை கணவனின் மீது சுமத்த திட்டமும் போடப்பட்டுள்ளது. இதன்படி கணவரை வீட்டிற்கு வரவழைத்துள்ளார். பின்னர் அதிகாலையில் வீட்டில் அனைவரும் உறங்கிக்கொண்டு இருந்த வேலையில், குழந்தையை கடலுக்கு தூக்கி சென்று கொலை செய்து நாடகமாடியாகது தெரியவந்துள்ளது. குழந்தையின் பிணம் கடற்கரையில் ஒதுங்கிய நிலையில், இது தொடர்பான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
in kerala child killed by mother due to illegal affair