அத்தையின் அல்லு சேட்டைகள்.! 9 வயது சிறுவனுக்கு ஓராண்டாக நேர்ந்த கொடூரத்தால் இறுதியில் நேர்ந்த சோகம்.!!  - Seithipunal
Seithipunal


கேரள மாநிலத்தில் வசித்து வரும் சிறுவன் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு தனது பெற்றோர்களுடன் சென்றுள்ளார். அந்த நேரத்தில்., சிறுவனை பெண்ணொருவர் பல முறை பாலியல் ரீதியிலான தொல்லைகளுக்கு உட்படுத்தியது தெரியவந்தது. 

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள் உடனடியாக குழந்தைகள் நல அதிகாரிகளுக்கு தகவலை தெரிவித்தனர். தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த குழந்தைகள் நல அதிகாரிகள் சிறுவனிடம் விசாரணை மேற்கொண்டனர்.

அந்த விசாரணையில்., சிறுவனின் அத்தை மூலமாக கடந்த ஓராண்டுகளாக பாலியல் தொல்லை வழங்கப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து குழந்தைகள் நல அதிகாரிகள் விஷயம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 

இவர்களின் புகாரை ஏற்ற காவல் துறையினர் சிறுவனின் அத்தையை கைது செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விஷயம் தொடர்பாக குழந்தைகள் நல அதிகாரிகள் தெரிவித்தாவது., சிறுவனை அவரது அத்தை கடந்த ஓராண்டாக பாலியல் ரீதியிலான வன்கொடுமை செய்துள்ளார். 

இதனால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான சிறுவன் பெரிதும் பாதிப்படைந்த நிலையில்., தக்க சமயத்தில் பெற்றோர்கள் சிறுவனை மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளனர். மருத்துவர்கள் மேற்கொண்ட சோதனையில்., சிறுவன் தெரிவித்த காரணத்தை கேட்டு., பின்னர் எங்களுக்கு தகவல் தெரிவித்தனர். 

பின்னர் சிறுவனிடம் விசாரணை மேற்கொண்டு அவரது அத்தையின் மீது வழக்கு பதிவு செய்து தற்போது விசாரணை மேற்கொண்டு வருகிறோம் என்று தெரிவித்தனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in kerala a boy miss used by her aunt sexual harassment


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->