மனைவி உண்மையாக இருந்தும், கணவனின் கேவல சிந்தனை.. 17 இடங்களில் வெட்டுக்காயத்துடன் துடிதுடித்த மனைவி...!!
in Karnataka husband murder attempt wife due to doubts
இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் உள்ள லே-அவுட் காவல்நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் வசித்து வருபவர் உமேஷ் (வயது 35). இவரது மனைவியின் பெயர் இந்திரா. இவர்கள் இருவருக்கும் கடந்த 7 வருடங்களுக்கு முன்னதாக திருமணம் நடைபெற்று முடிந்த நிலையில், இருவரும் மகிழ்ச்சியுடன் வசித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில், இந்திராவின் நடவடிக்கையில் உமேஷிற்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதன் காரணமாக கணவன் - மனைவி இருவருக்கும் இடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் ஏற்பட்ட தொடர் பிரச்சனைகளை அடுத்து, இருவரும் கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் பிரிந்துள்ளனர்.
இவர்களை கவனித்து வந்த குடும்பத்தினர் இருவரின் எதிர்காலம் கருதி, தம்பதிகளுக்குள் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்துள்ளனர். பின்னர் இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்த நிலையில், உமேஷின் சந்தேகம் தீர்ந்தபாடில்லை.
இதனால் வழக்கம்போல இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்ட நிலையில், ஆத்திரமடைந்த உமேஷ் - இந்திராவை சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளார். இதனால் நிலைகுலைந்த இந்திரா உயிருக்கு போராடவே, இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் அவசர ஊர்திக்கும் - காவல் துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், இந்திராவை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் இந்திராவுக்கு தீவிர சிகிச்சை அளித்து வரும் நிலையில், இந்திராவின் உடலில் 17 வெட்டுக்காயங்கள் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறது. இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், வழக்குப்பதிவு செய்து உமேஷை கைது செய்துள்ளனர். இது தொடர்பான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
in Karnataka husband murder attempt wife due to doubts