தீராத வயிற்று வலி... நரகமான மாணவியின் வாழ்க்கை.. வலியை தீர்க்க இறுதி வழி தேடிய மாணவியின் கடிதத்தில் கண்ணீர் சோகம்.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் உள்ள குடகு மாவட்டத்தில் உள்ள விராஜ்பேட்டை தாலுகாவில் அமைந்துள்ள பெல்லக்கெரே கிராமத்தை சார்ந்தவர் ரஞ்சிதா (வயது 17). இவர் அங்குள்ள அரசு கல்லூரியில் பயின்று வருகிறார். 

இவருக்கு தீராத வயிற்று வலி பிரச்சனையானது நீண்டகாலமாக இருந்து வந்துள்ளது. இதனால் அதிகளவு அவதியுற்று வந்துள்ளார். இந்த பிரச்சனைக்கு அங்குள்ள பல மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வந்துள்ள நிலையில், வயிற்று வலி பிரச்சனை குணமாகவில்லை. 

இதனால் ரஞ்சிதா மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்த நிலையில், நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். ரஞ்சிதாவின் பெற்றோர்கள் வீட்டிற்கு திரும்பியதும், மகள் தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். 

பின்னர் மகளின் உடலை கட்டியணைத்து கதறியளவே, அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து பார்க்கையில் விபரீதம் புரிந்துள்ளது. பின்னர் இது தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், ரஞ்சிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த விஷயம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். 

இந்த விசாரணையில், ரஞ்சிதா கைப்பட எழுதி வைத்துள்ள கடிதம் கிடைத்துள்ளது. இந்த கடிதத்தில், எனது மரணத்திற்கு யாரும் காரணம் கிடையாது. என்னால் பலருக்கு கஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனாலேயே நான் இம்முடிவை எடுக்கிறேன்.. எனது தாய், தந்தை, நண்பர்களை விட்டு பிரிந்து செல்கிறேன், மன்னித்துவிடுங்கள் என்று கூறியுள்ளார். இது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in karnataka girl suicide attempt due to stomach pain


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->