உயிருடன் புதைக்கட்டும் அப்பாவி கோழிகள்.. பதைபதைக்க வைக்கும் வீடியோ காட்சிகள்.!!
in Karnataka chicken murder due to corona virus foolish panic
சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் பாதிப்பு தற்போது இந்தியாவில் பரவி வருகிறது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கியவர்களின் 73 ஆக உயர்ந்துள்ளது. உலகம் முழுக்க 114,422 பேர் கொரோனாவால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
சீனாவில் 80,754 பேர் கொரோனாவால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சீனாவில் 4,716 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர். இந்தியாவில் கர்நாடக மாநிலத்தில் கரோனா வைரஸிற்கு முதியவர் பலியாகினர்.
இந்த விஷயம் தொடர்பான தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், கோழி இறைச்சியால் கரோனா வைரஸ் பரவியுள்ளது என்று போலியான தகவல் இணையத்தில் பரவி வந்தது.
இதனால் மக்கள் பெரும் பீதியில் உறைந்த நிலையில், சமூக வலைத்தளத்தில் உலா வரும் பீதியை மக்கள் நம்ப வேண்டாம் என்று அரசு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில், கர்நாடக மாநிலத்தில் கோழிகள் உயிருடன் மண்ணிற்குள் புதைக்கப்படும் வீடியோ காட்சிகள் வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
in Karnataka chicken murder due to corona virus foolish panic