திருமண நிகழ்ச்சிக்கு சென்று திரும்புகையில், தலைகுப்புற கவிழ்ந்த டிராக்டர்.. 5 பேர் துடிதுடித்து பலி.!!  - Seithipunal
Seithipunal


இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் உள்ள பல்லாரி மாவட்டம் ஹூவினகடஹள்ளி கிராமத்தில் டிராக்டர் வந்து கொண்டு இருந்துள்ளது. இந்த டிராக்டர் திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தை நோக்கி பயணம் செய்துள்ளது. 

ஓட்டுநர் எவ்வுளவு முயற்சித்தும் பலனில்லாது, சாலையோரத்தில் இருந்த பள்ளத்தில் டிராக்டர் கவிழ்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில், டிராக்டருக்கு அடியில் சிக்கிய 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து பலியாகியுள்ளனர். 

மேலும், 10 பேர் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டு வெளியே வர இயலாது அலறித்துடித்துள்ளனர். இந்த விபத்தை கண்டு அதிர்ச்சியடைந்த மக்கள், இது குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் ஐவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், படுகாயமடைந்த நபர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இவர்கள் திருமண நிகழ்ச்சிக்கு சென்று திரும்புகையில் விபத்து ஏற்பட்டுள்ளது என்பது தெரியவந்துள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Karnataka accident police investigation peoples died


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->