ஓசி சரக்கு கேட்டு ஒயின்சாப் காசாளரின் மண்டையை புலந்த ரவுடிகள்.! காசாளருக்கு ஆதரவாக ஒன்று திரண்ட குடிமகன்கள்.!!  - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தில் ஊழல் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் உள்ள கொள்ளேகால் நகர் பகுதியில் தனியார் மதுபான கடையானது செயல்பட்டு வருகிறது. இந்த கடையின் காசாளராக அங்குல டி.நரசிபுரா பகுதியை சார்ந்த கிரண் என்பவர் பணியடி வருகிறார். இந்த மதுபான கடைக்கு தினமும் மது அருந்துவதற்கு பலர் வந்து செல்வது வழக்கம். 

இந்த நிலையில்., நேற்று இரவு மது அருந்துவதற்கு வந்த நான்கு நபர்கள்., காசாளரிடம் சென்று எங்களுக்கு இலவசமாக மதுவை வழங்க வேண்டும் என்று கூறி தகராறு செய்துள்ளனர். இதனை கேட்ட காசாளர் இலவசமாக மதுவை வழங்குவதற்கு மறுப்பு தெரிவித்த நிலையில்., காசாளரை அடித்து நொறுக்கினர். 

இதுமட்டுமல்லாது கொலை மிரட்டலும் விடுத்தனர். இதனையடுத்து கடையில் இருந்த சக குடிமகன்கள் காசாளருக்கு ஆதரவாக வருவதை அறிந்த கும்பல் சம்பவ இடத்தில் இருந்து தப்பியோடவே., காயமடைந்த காசாளரை மீட்டு அங்குள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

சிகிச்சைகளை எடுத்து கொண்ட காசாளர் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து., இது குறித்த புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். 

அந்த விசாரணையில்.,  இலவசமாக மதுபானம் கெட்டவர்கள் அங்குள்ள பீமநகர் காலனியை சார்ந்த சுகாஷ்., நிகில்., தீபக் மற்றும் ஆகாஷ் என்பதும்., சுகாஷ் மற்றும் நிகில் பிரபல தேடப்பட்டு வந்த ரவுடிகள் என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து சுகாஷ் மற்றும் நிகிலை கைது செய்த காவல் துறையினர்., தலைமறைவாக உள்ள தீபக் மற்றும் ஆகாஷை தேடி வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in karnadaga wine shop seller attack by rowdy peoples help wine shop man


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->