நேருக்கு நேர் மோதி பற்றி எறிந்த லாரிகள்... உடல்கருகி பலியான ஓட்டுனர்கள்.!!
in karnadaga lorry accident drivers died
கர்நாடகா மாவட்டத்தில் உள்ள தாவணகெரே மாவட்டத்தில் இருக்கும் ஜகலூர் பறநகர் பகுதியில் இன்று அதிகாலை சுமார் 4 மணியளவில் ஹரியானா மாநிலத்தையுடைய பதிவு எண் கொண்ட கியாஸ் டேங்கர் லாரியானது சென்று கொண்டு இருந்தது.
இந்த சமயத்தில்., சாலையின் எதிர் திசையில் பெங்களூரில் இருந்து டயர்களை ஏற்றிக்கொண்டு வந்த கண்டைனர் லாரியானது சென்று கொண்டு இருந்தது. இந்த இரன்டு லாரிகளும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டது.
இந்த விபத்தில்., விபத்து நடந்து கண்ணிமைக்கும் நொடியில் தீப்பற்றி எரிய துவங்கியது. இந்த தீயானது இரண்டு வாகனத்திலும் மளமளவென பரவத்துவங்கிய நிலையில்., இரண்டு லாரிகளும் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டு இருந்தது.
இதனையடுத்து சக வாகன ஓட்டிகள் இது தொடர்பாக அங்குள்ள காவல் நிலையத்திற்கும்., தீயணைப்பு படையினருக்கும் தகவல் தெரிவித்தனர். தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் நீண்ட நேரம் போராடி லாரியில் பற்றியெரிந்த தீயை கட்டுக்குள் கொண்டு வந்து அணைத்தனர்.
ஆனால் இந்த விபத்தில் இரண்டு லாரியில் இருந்த நான்கு பெரும் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்த நிலையில்., இரண்டு லாரிகளும் எலும்பு கூடுகளாக காட்சியளித்தது. மேலும்., இறந்தவர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு காவல் துறையினர் அனுப்பி வைத்தனர். இறந்தவர்களின் விபரங்கள் குறித்த தகவல் இல்லை. இந்த விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
Tamil online news Today News in Tamil
English Summary
in karnadaga lorry accident drivers died