மருமகளிடம் அத்துமீறிய கொடூர மாமனார்.! துடிதுடிக்க அரங்கேறிய கொடூர சம்பவம்.!!
in karnadaga girl killed due to sexual torture
கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹலக்கூர் மண்டியா மாவட்டத்தை சேர்ந்த நாகராஜ் என்ற விவசாயிக்கு அனில் என்ற மகன் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு வீணா என்ற மனைவி இருக்கிறார். அனைவரும் கூட்டுக் குடும்பமாக வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், சில மாதங்களாகவே தன்னுடைய மருமகளுக்கு நாகராஜ் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது. மகன் வீட்டில் இல்லாதபொழுது அரைகுறையாக உடை அணிந்து ஆபாசமாக நடந்து கொள்வது, சில்மிஷத்தில் ஈடுபடுவது என நாகராஜு மிகவும் மோசமாக நடந்து வந்துள்ளார்.
ஒரு கட்டத்தில் தன்னுடைய ஆசைக்கு இணங்கும்படி மருமகளை நாகராஜ் வற்புறுத்தியுள்ளார். இதன் காரணமாக மிகுந்த அதிர்ச்சி அடைந்த வீணா தன்னுடைய கணவனிடம் கூறி விடுவேன் என மிரட்டியுள்ளார். இருப்பினும் அவரது தொல்லை குறைந்தபாடில்லை.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அனில் வேலை விஷயமாக வெளியூர் சென்றுவிட நள்ளிரவில் தன்னுடைய ஆசைக்கு இணங்க கூறி வீணாவை ராஜு வற்புறுத்துகின்றார். இதன் காரணமாக வீணா கத்தி கூச்சல் போட ஆரம்பிக்க ஆத்திரமடைந்த நாகராஜ் மருமகளை சரமாரியாக தாக்கி தன்னுடைய வீட்டில் இருந்த கத்தியை எடுத்து குத்தி இருக்கின்றார்.
சம்பவ இடத்திலேயே குத்துபட்டு வீணா துடிதுடித்து இறந்துள்ளார். இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
in karnadaga girl killed due to sexual torture