சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து தாயாக்கிய கொடூர தந்தை.! நீதிமன்றத்தின் பரபரப்பு தீர்ப்பு.!!
in karnadaga father rapped child and born baby court judgement jail
கர்நாடக மாநிலத்தில் உள்ள மங்களூரில் உள்ள பண்டேஸ்வர் பகுதியை சார்ந்தவர் கிஷோர் பையா (வயது 36). இவர் கூலித் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 2016 ஆம் வருடத்தின் போது இரண்டவது மனைவியை பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட நிலையில்., இவருடன் உறவினர்கள் மருத்துவமனையில் தங்கியிருந்து வந்துள்ளனர்.
இந்த நேரத்தில்., கிஷோர் மற்றும் அவரது 13 வயதுடைய மூத்த மகள் வீட்டில் தனியாக இருந்த நிலையில்., கிஷோர் தனது மகள் என்றும் பாராது பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். மேலும்., இது குறித்து யாரிடமும் கூறினால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியதை அடுத்து., இது குறித்து சிறுமி யாரிடமும் தெரிவிக்காமல் இருந்துள்ளார்.
இதனை பயன்படுத்திக்கொண்ட காம கொடூரன் தனது மகளை தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து வந்த நிலையில் சிறுமி கர்ப்பமாகியுள்ளார். இதனையும் யாரிடமும் தெரிவிக்காமல் இருந்த நிலையில்., தொடர்ந்து வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் சந்தேகமடைந்த தாயார் சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.
மருத்துவமனையில் சிறுமியை சோதனை செய்த மருத்துவர்கள் சிறுமி நிறைமாத கர்ப்பிணியாக இருப்பதாக தெரிவித்ததை அடுத்து., இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த தாயார் இது தொடர்பாக சிறுமியிடம் விசாரித்துள்ளார். சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது தந்தை என்பதை அறிந்து பெரும் அதிர்ச்சிக்கு உள்ளான நிலையில்., தான் சந்தித்த இன்னல்களை தாயிடம் கூறி கதறியழுதுள்ளார்.
இந்த நிலையில்., சிறுமிக்கு சில நாட்களிலேயே பெண் குழந்தை பிறந்த நிலையில்., இது தொடர்பாக சிறுமியின் தாயார் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பான புகாரை ஏற்ற காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு கொடூரனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து தாயாக்கிய கிஷோருக்கு அருள் தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டுள்ளார். மேலும்., இந்த வழக்கு கடந்த 2017 ஆம் வருடத்தில் பதிவு செய்யப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது..
Tamil online news Today News in Tamil
English Summary
in karnadaga father rapped child and born baby court judgement jail